Fact Check Unit: மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு, உண்மை கண்டறியும் குழு (Fact Check Unit) உருவாக்குவதற்கான அறிவிப்பை நேற்று (மார்ச் 20) வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு உச்ச நீதிமன்றம் ஒரு நாள் தடை விதித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத் திருத்த விதிகள் 2023ன் கீழ் இந்த உண்மை கண்டறியும் குழு (Fact Check Unit) மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்களை கண்டறிந்து, உண்மைத்தன்மை வெளிப்படுத்துவதே இதன் வேலை ஆகும். தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரை மத்திய அரசின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உண்மை கண்டறியும் குழு (FCU) என்றால் என்ன?


தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2023ன் கீழ் மத்திய அரசு மார்ச் 20 ஆம் தேதி தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஒரு பிரிவான செய்தித் தகவல் பணியகத்தின் (PIB) கீழ் உள்ள உண்மை கண்டறியும் குழுவை (Fact Check Unit) மத்திய அரசின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவாக அறிவித்தது.


சில மாதத்திற்கு முன்பு தகவல் தொழில்நுட்ப விதிகள் மாற்றப்பட்டன. புதிய விதிகளின்படி, சமூக வலைதளங்களை கண்காணிக்கும் வகையில், மத்திய அரசு இந்த உண்மை சோதனை பிரிவை உருவாக்கியுள்ளது. தற்போது, ​​மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை, மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழு (Fact Check Unit) அறிவிப்பு நடைமுறைக்கு வராது.


மேலும் படிக்க - குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் -உச்சநீதிமன்றம்


தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளில் திருத்தம்


கடந்த ஆண்டுதான் மோடி அரசு உண்மை கண்டறியும் குழு  அமைக்கப்படும் என அறிவித்தது. அப்போது தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த விதிகளின்படி, உண்மை கண்டறியும் குழு எந்தத் தகவலையும் தவறானதாக அறிவித்தால், அதை மீண்டும் வெளியிடவோ அல்லது பகிரவோ முடியாது என்று கூறப்பட்டது. இதனையடுத்து தகவல் தொழில்நுட்பத் திருத்தச் சட்டவிதிகளை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


உண்மை கண்டறியும் குழுவுக்கு எதிராக நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா வழக்கு 


புதிய விதிகளின்படி, சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தகவல்கள் தவறானவை என உண்மைச் சோதனை பிரிவு கண்டறிந்தால், சம்பந்தப்பட்ட தளம் அதை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது சமூக ஊடக நிறுவனங்கள் மற்றும் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களை பாதிக்கும். இந்த விதிகளை எதிர்த்து பாம்பே உயர்நீதிமன்றத்தில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா வழக்கு 


உண்மை கண்டறியும் குழுவுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம்


மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழு வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, "இது கருத்து சுதந்திரம் சம்பந்தப்பட்ட விஷயம் எனக்கூறி, உண்மை கண்டறியும் குழு (Fact Check Unit) தொடர்பான அரசாணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.


மேலும் படிக்க - உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் லிஸ்ட்! இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ