ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாகுதலையொட்டி இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் ராணுவத்தினர் அண்மையில் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர். அவர்களின் உடல்களையும் பாகிஸ்தான் ராணுவத்தினர் சிதைத்தனர். இச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன.


இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பூஞ்ச மாவட்டத்தில் உள்ள பாலகோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி இன்று மீண்டும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.


அதேசமயம், ராணுவ வீரர்கள், போலீசார் என சுமார் 1000 வீரர்கள் கூட்டு நடவடிக்கையாக அம்மாநிலத்தின் சோபியன் மாவட்டத்தில் அமைந்துள்ள ஷிர்மல் கிராமத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.