IPL 2018 தொடரின் 11-வது சீசனின்,17_வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும், சென்னை அணிகள் மோதின. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே முதலில் சென்னை அணியை பேட் செய்ய அழைத்தார். 


முதலில் பேட்டிங்செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. 


ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய வாட்சன், 51 பந்தில் சதமடித்தார். 


இது, இவரது 3வது ஐ.பி.எல்.சதம். இவர், 57 பந்தில் 106 ரன்கள் (6 சிக்சர், 9 பவுண்டரி) எடுத்து அவுட்டானார்.


ராஜஸ்தான் அணி சார்பில் ஸ்ரேயாஸ் கோபால், 3 விக்கெட் வீழ்த்தினார்.


இதனையடுத்து, 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி ஆடியது.


நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி, 18.3 ஓவரில், 140 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி' தோல்வியடைந்தது. 


இதன் மூலம் சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. 


சென்னை அணி சார்பில் தீபக் சகார், ஷர்துல் தாகூர், டுவைன் பிராவோ, கரண் சர்மா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.


4-வது லீக்கில் ஆடிய சென்னை அணிக்கு இது 3-வது வெற்றியாகும். ராஜஸ்தானுக்கு விழுந்த 3-வது அடியாகும். 


சென்னை அணி தனது அடுத்த ஆட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஐதராபாத் சன்ரைசர்சை (மாலை 4 மணி) சந்திக்கிறது.