IPL 2018 தொடரின் 44-வது போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.


இத்தொடரின் 44-வது போட்டியில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் தற்போது விளையாடி வருகின்றன. இந்தூர் மைதானத்தில் நடைப்பெற்று வரும் இப்போட்டியில்  டாஸ் வென்ற டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்து விளையாடி வருகிறது.



புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது. இதுவரை பத்து ஆட்டங்களில் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி பத்து போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு தகுதி பெரும் முனைப்பில் உள்ளது. 


அதே வேளையில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி 11 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகள் பெற்றுள்ளது. 


பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் கொல்கத்தா அணி இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. 


பஞ்சாப் அணி ராஜஸ்தானிடமும், கொல்கத்தா அணி மும்பையிடமும் என இரு அணிகளுமே தங்களது கடைசி ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளன. 


இதுவரை IPL தொடரில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பஞ்சாப் அணி 8 வெற்றியும், கொல்கத்தா அணி 14 வெற்றியும் பெற்றுள்ளது. அதேபோல இன்றைய போட்டி நடக்கவிருக்கும் இந்தூரில் மைதானத்தில் இரண்டு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன.