IPL 2018 தொடரின் 11-வது சீசனின், 20-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகள் மோதின. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சா்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.


முதலில் பேட்டிங்செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. 


ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும், தவால் குல்கர்ணி 2 விக்கெட்டும், உனட்கட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 


இதனையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி ஆடியது.


அந்த அணியின் துவக்க வீரர்கள் ரகானே மற்றும் திரிபாதி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். 


பின்னர் வந்த பென் ஸ்டோக்ஸ்-சஞ்சு சாம்சன் ஜோடி சிறப்பாக விளையாடி 3-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தது. 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்தார். 


இறுதியில் தனது அதிரடியை வெளிபடுத்திய கவுதம் 11 பந்துகளில்  2 சிக்ஸர் உள்பட 33 ரன்கள் எடுத்து தனது அணியை வெற்றி அடைய செய்தார்


கவுதம் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி அடைய செய்தார்.  2 பந்துகள் மீதமிருந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டியது


நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி, 19.4 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது வெற்றியை ருசித்தது.