தி.மு.க தலைவர் மு.கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்குத் தொண்டையில் சிறுதுளை இடப்பட்டு, அதன்வழியாக மூலம் உணவு மற்றும் மருந்து செலுத்தப்பட்டுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தநிலையில், அவ்வப்போது மு.கருணாநிதியை அவர் அடிக்கடி வந்து செல்லும் இடங்களுக்கு அழைத்துச் சென்று பழைய நினைவுகளை அவருக்கு நினைபடுத்தி வருகின்றனர். அவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மூன்று மாதங்களுக்கு முன்பு அண்ணா அறிவாலயம் வந்தார். முரசொலி அலுவலகம், கனிமொழி இல்லம் என்று அவ்வப்போது அவரை அழைத்துச் சென்று வருகின்றனர்.


நேற்று திடீரென்று அண்ணா அறிவாலயத்துக்கு கருணாநிதி அழைத்து வரப்பட்டார். அவரை, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் வரவேற்றனர். சில நிமிடங்கள் அண்ணா அறிவாலயத்தில் இருந்த கருணாநிதி பின்னர்க் கோபாலபுரம் புறப்பட்டார். 


கருணாநிதி அண்ணா அறிவாலயம் வந்திருக்கிறார் என்ற செய்தி பரவியதும் தி.மு.க தொண்டர்கள் அங்குக் குவிய தொடங்கினர். சிகிச்சைக்குப் பிறகு இரண்டாவது முறையாக மு.கருணாநிதி அண்ணா அறிவாலயம் வந்திருப்பது தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.