7th Pay Commission, DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. கூடிய விரைவில் அவர்களுக்கு ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று பம்பர் பரிசுகள் கிடைக்க உள்ளன. மக்களவைத் தேர்தலுக்கு (Lok Sabha Election) முன்னதாக மோடி அரசாங்கம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊழியர்களுக்கு வரவுள்ள முக்கிய அறிவிப்புகள் என்ன? இவற்றால் ஊழியர்களுக்கு என்ன நிவாரணம் கிடைக்கும்? இவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊழியர்கள் இந்த 3 பரிசுகளை கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்:


- அகவிலைப்படி அதிகரிப்பு (DA Hike)
- ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிப்பு (Increases in Fitment Factor)
- அகவிலைப்படி அரியர் தொகை (DA Arrears)


அகவிலைப்படி அதிகரிப்பு


சமீபத்தில் தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ இன்டெக்ஸ் (AICPI Index) தரவுகளை வைத்து பார்த்தால், ஜனவரி 2024 -இல் அகவிலைப்படி 4% அதிகரிக்கும் என்பது தெளிவாகிறது. டிஏ (DA) 4 சதவிகிதம் அதிகரித்தால் ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி (Dearness Allowance) 50 சதவிகிதமாக உயரும். இந்த அதிகரிப்பு ஜனவரி 2024 முதல் அமலுக்கு வரும். 


இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் படி, மார்ச் மாத ஊதியத்தில், ஜனவரி மற்றுன் பிப்ரவரி மாத டிஏ உயர்வு அரியர் தொகையும் சேர்ந்து வரும். இதன் காரணமாக சுமார் 48 லட்சம் ஊழியர்களும் (Central Govenrment Employees) 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் (Pensioners) பலனடைவார்கள். 


அகவிலைப்படி 50% -ஐ எட்டினால், 7வது ஊதியக்குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின் கீழ் அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு, 50% அகவிலைப்படியின் தொகை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும், அதாவது ஊழியர்களின் சம்பள திருத்தம் செய்யப்படும். அதன் பிறகு ஊதியத்தின் எச்ஆர்ஏ (HRA), டிஏ (TA) போன்ற பிற அலவன்சுகளிலும் ஏற்றம் ஏற்படும். 


மேலும் படிக்க | குழந்தைகளுக்கான Blue Aadhar Card: விண்ணப்பிப்பது எப்படி? என்னென்ன ஆவணங்கள் தேவை?


ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிப்பு


ஃபிட்மெண்ட் ஃபாக்டரை (Fitment Factor) அதிகரிக்க வேண்டும் என ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 ஆக உள்ளது. இதன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகின்றது. எனினும், இதை 3.00 மடங்காக அத்கரிக்க வேண்டும் என ஊழியர் சங்கங்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த கோரிக்கைக்கு மத்திய அரசு (Central Government) இப்போது செவி சாய்க்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கம் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 3.00 -க்கு பதிலாக 3.68 ஆகவும் உயர்த்த வாய்ப்புள்ளதாக சில பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். அப்படி நடந்தால், அடிப்படை சம்பளம் ரூ.18,000 -இல் இருந்து ரூ.21,000 ஆக உயரும். இது ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றத்தை கொண்டு வரும். 


அகவிலைப்படி அரியர் தொகை


கொரோனா காலத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக உலகம் முழுவதும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் அவதியில் இருந்தனர். இதை சமாளிக்க, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைபப்டியை முடக்கிய அரசு, அதை அதிக தேவையில் இருந்தவர்களுக்கு பயன்படுத்தியது. நிலைமை சற்று சீரானவுடன் அகவிலைப்படி முடக்கம் நீக்கப்பட்டது. ஆனால், முடக்கப்பட்ட காலத்திற்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை இன்னும் ஊழியர்களுக்கு கிடைக்கவில்லை. தற்போது இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் அரசு இந்த செய்தியை அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


மேலும் படிக்க | இந்தியன் ரயில்வேயின் புதிய விதி.. இனி டிக்கெட் இல்லாவிட்டால் பணம் உடனே கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ