7வது ஊதியக் குழு, அகவிலைப்படி உயர்வு: 65 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் சுமார் 48 லட்சம் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் குறித்த முடிவு மார்ச் முதல் வாரத்தில் வெளியாக உள்ளது. மார்ச் மாதம் அகவிலைப்படி உயர்வு குறித்த முடிவிற்கு முன், மத்திய ஊழியர்களுக்கு ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. இந்தச் செய்தியைக் கேட்டதும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு வருத்தம் ஏற்படலாம். ஆம், நவம்பர் மாதத்திற்குப் பிறகு தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட டிசம்பர் மாத ஏஐசிபிஐ குறியீட்டின் புள்ளிவிவரங்களில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் சரிவுக்குப் பிறகு, டிஏ அதிகரிப்பு எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏஐசிபிஐ குறியீடு நவம்பர் வரை தொடர்ந்து உயர்ந்தது


ஜூலை முதல் நவம்பர் வரை, ஏஐசிபிஐ குறியீட்டின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் டிசம்பரில் சரிவு பதிவாகியுள்ளது. ஜனவரி 1 முதல் அளிக்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு அதன் அடிப்படையில் குறைக்கப்படலாம். இருப்பினும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களின் புள்ளிவிவரங்கள் மாற்றமேதும் இல்லாமல் அப்படியே இருந்தன. நவம்பருடன் ஒப்பிடுகையில் டிசம்பர் எண்ணிக்கை 132.3 புள்ளிகளாக குறைந்துள்ளது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்த எண்ணிக்கை 132.5 புள்ளிகளாக இருந்தது. செப்டம்பரில் 131.3 ஆகவும், ஆகஸ்டில் 130.2 ஆகவும், ஜூலையில் 129.9 ஆகவும் இந்த எண்ணிக்கை இருந்தது.


அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கலாம்


ஜனவரி 31 அன்று, தொழிலாளர் அமைச்சகத்தால் டிசம்பர் மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீட்டின் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன. இப்போது, ​​தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், ஜனவரி 1 முதல் வழங்கப்படும் ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிப்பு 4 சதவீதத்திற்கு பதிலாக 3 சதவீதமாக இருக்கலாம். அதாவது, எண்ணிக்கை குறைவதால், ஊழியர்களுக்கு நேரடியாக ஒரு சதவீதம் இழப்பு ஏற்படலாம். இந்த உயர்வு மார்ச் மாதம் அரசால் அறிவிக்கப்படும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: பட்ஜெட்டுக்கு பின்னர் ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம், மாஸ் செய்தி 


அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்


ஜூலை மாத அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்ட பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38 சதவீதமாக அதிகரித்துள்ளது. இப்போது அதில் 3 சதவீதம் அதிகரித்தால், அது 41 சதவீதமாக அதிகரிக்கும். ஏழாவது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை அதிகரிக்கப்படுகிறது. ஜனவரி 2022 மற்றும் ஜூலை 2022 -க்கான அகவிலைப்படி அறிவிக்கப்பட்டது. இப்போது ஜனவரி 2023 இன் அகவிலைப்படி விரைவில் அறிவிக்கப்படும்.


தரவுகளை வெளியிடுவது யார்?


ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு இருக்கும் என்பது முடிவு செய்யப்படுகின்றது. ஒவ்வொரு மாதத்தின் கடைசி வேலை நாளில், அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (ஏஐசிபிஐ) புள்ளிவிவரங்கள் தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்படுகின்றன. இந்த குறியீடு 88 மையங்களுக்கும் மற்றும் நாடு முழுவதும் தயாரிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | 7th Pay Commission: HRA விதிகளில் மாற்றம்! இனி இவர்களுக்கு அலவன்ஸ்கள் கிடையாது! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ