அரசு ஊழியர்கள் பலரும் முக்கியமாக மத்திய அரசு ஊழியர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த மகிழ்ச்சியான செய்து வந்துவிட்டது.  ஒரே நேரத்தில் அவர்களுக்கு இரண்டு மகிழ்ச்சியான செய்திகள் காத்துகொண்டு இருக்கிறது, அதாவது மீண்டும் லட்சக்கணக்கான ஊழியர்களின் சம்பளம் உயரப்போகிறது.  இதன்மூலம் அனைத்து அரசு ஊழியர்களும் அவர்களின் குடும்பங்களும் பயனடைய போகிறார்கள், மேலும் பதவி உயர்வும் கிடைக்க போகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஊழியர்களுக்கான அப்ரெய்ஸல் விண்டோ திறக்கப்பட்டுள்ளது, இந்த விண்டோ ஜூன் 30 வரை திறந்திருக்கும்.  அதனால் இந்த குறிப்பிட்ட தேதிக்குள், பணியாளர்கள் செல்ஃப் அசெஸ்மென்டை பூர்த்தி செய்து ரிப்போர்டிங் அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ ஹைக் பற்றிய முக்கிய அப்டேட், ஊதியத்தில் பம்பர் அதிகரிப்பு 


பணியாளர்கள் நிரப்பிய செல்ஃப் அசெஸ்மென்ட் அதிகாரி அளிக்கும் மதிப்பீட்டின் அடிப்படையில்தான் பதவி உயர்வு முடிவு செய்யப்படும்.  வருடாந்திர செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கை (ஏபிஏஆர்) தொகுதி தயாரிக்கப்பட்டுள்ளதாக இபிஎஃப்ஓ ​​வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இதனைத்தொடர்ந்து விரைவில் ஆன்லைன் விண்டோவும் தொடங்கும், அதன் பிறகு ஃபைனல் அசெஸ்மென்ட் அனுப்பப்படும்.  இந்த மையத்தின் அனைத்து ஊழியர்களும் அப்ரெய்ஸல் சுழற்சியில் வருவார்கள், குரூப் ஏ, குரூப் பி மற்றும் குரூப் சி ஊழியர்களுக்கான அப்ரெய்ஸல் விண்டோ திறக்கப்படுகிறது.  2021-22 நிதியாண்டுக்கான வருடாந்திர மதிப்பீட்டுத் தேதி நெருங்கிவிட்டது, ஜூலை 31க்குள் முடிக்க வேண்டும்.  பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) படி, குழு A, B மற்றும் C-ன் வருடாந்திர செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கைக்கான (ஏபிஏஆர்) விண்டோ திறக்கிறது, ஊழியர்களின் ஏபிஏஆர்நிலுவையில் இருப்பதால், அவர்களுக்கு ஏபிஆர் பலனும் கிடைக்கும்.



மத்திய ஊழியர்களுக்கு DoPT மூலம் ஆன்லைன் படிவங்கள் அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது, மதிப்பீட்டு பணியும் தொடங்கியுள்ளது.  பணியாளர்கள் படிவத்தில் உள்ள தகவல்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஜூன் 30க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.  இந்த செயல்முறையை முடிக்க ஜூலை 31 வரை கால அவகாசம் எடுக்கும்.  இதனுடன் மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படியின் பலனைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசாங்கம் இரண்டு முறை உயர்த்தப்பட்டு வருகிறது.  அதன்படி ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது, அகவிலைப்படியின் இரண்டாம் தவணை ஜூலையில் அறிவிக்கப்பட உள்ளது.  ஏஐசிபிஐ குறியீட்டின் டேட்டாபடிம, ஜூலை மாதத்தில் 4 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம், எச்பிஏ விகிதங்களை குறைத்தது அரசு 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ