7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் மீண்டும் ஒரு நல்ல செய்தி கிடைக்கும். ஊழியர்களுக்கு பரிசு வழங்க மோடி அரசு தயாராகி வருகிறது. இம்மாதம் கடைசி வாரத்தில் அகவிலைபப்டி உயர்வுடன், விட்டு வாடகை கொடுப்பனவு உயர்வும் அறிவிக்கப்படக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக தீபாவளியின்போது, மோடி அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (Dearness Allowance) 3 சதவீதம் உயர்த்தியது. இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அரசு மகிழ்ச்சிகரமான செய்தியை அளிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அகவிலைப்படியுடன் வீட்டு வாடகை கொடுப்பனவையும் (HRA) அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.


முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது


11.56 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) அமல்படுத்துவது குறித்து நிதி அமைச்சகம் பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கான ஒப்புதலுக்காக ரயில்வே வாரியத்துக்கும் முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. 


இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டால், ஊழியர்களுக்கு  வீட்டு வாடகை கொடுப்பனவு கிடைக்கும். ஜனவரி 1, 2021 முதல் எச்ஆர்ஏவை அமல்படுத்த இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் மற்றும் தேசிய ரயில்வே ஃபெடரேஷன் ஆகியவை கோரி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டு வாடகை கொடுப்பனவு உயர்த்தப்பட்ட பிறகு சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும்.


ALSO READ | 7th Pay Commission: அகவிலைப்படியில் பெரிய மாற்றம்! சம்பளத்தில் மாற்றம் ஏற்படுமா


வீட்டு வாடகை கொடுப்பனவின் தொகை எவ்வளவு இருக்கும்
50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் 'X' பிரிவின் கீழ் வருகின்றன. 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் 'Y' பிரிவில் வருகின்றன. மேலும் 5 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் 'Z' பிரிவின் கீழ் வருகின்றன. 


மூன்று வகைகளுக்கும் குறைந்தபட்ச HRA ரூ.5400, 3600 மற்றும் ரூ.1800 ஆக இருக்கிறது. செலவினத் திணைக்களத்தின் படி, அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும்போது, ​​அதிகபட்ச வீட்டு வாடகை கொடுப்பனவு 30 சதவீதமாக அதிகரிக்கும். ஆனால் அகவிலைப்படி 50 சதவீதத்திற்கு மேல் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். 
ஏனென்றால், அரசின் பழைய உத்தரவின்படி, அகவிலைப்படி 50 சதவீதத்தைத் தாண்டினால், வீட்டு வாடகை கொடுப்பனவு, 30 சதவீதம், 20 சதவீதம், 10 சதவீதம் என்று இருக்கும் என்று கூறப்பட்டது.


அகவிலைப்படியில் வரும் ஏற்றத்திற்கு ஏற்ப தற்போது ஊழியர்கள் தங்கள் வீட்டு வாடகை கொடுப்பனவிலும் அதிகரிப்பை எதிர்பார்க்கலாம். இதனால் ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் அதிகரிப்பு  (Salary Hike) இருக்கும்.


ALSO READ | 7th Pay Commission: மத்திய ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ், சம்பளம் உயரும் நிச்சயம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR