7வது ஊதியக் குழுவின் சமீபத்திய செய்திகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. ஊழியர்களின் அகவிலைப்படியில் திருத்தம் செய்யப்பட்டு, அதன் பிறகு, ஜூலை 2022 இல் அவர்களது சம்பளம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊடக அறிக்கைகளின் படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி குறித்த அறிவிப்பு மே 31-ஆம் தேதிக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அகவிலைப்படியில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும் என்பதை ஜூலை இறுதிக்குள் மத்திய அரசு அறிவிக்கக்கூடும் என்று அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


7வது மத்திய ஊதியக் குழுவின் விதிகளின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. இது ஆண்டின் தொடக்கத்தில் (ஜனவரியில்) ஒரு முறையும், பின்னர் இரண்டாம் பாதியின் தொடக்கத்தில், அதாவது ஜூலை மாதத்திலும் திருத்தப்படுகிறது. 


ஜனவரி 2022 முதல், ஊழியர்களின் அகவிலைப்படியான டிஏ மற்றும் அகவிலை நிவாரணமான டிஆர் ஆகிய இரண்டும் அடிப்படை ஊதியத்தில் 3 சதவீதம் அதிகரித்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைந்துள்ளனர். 


ஏஐசிபிஐ (அனைத்து இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு) அதிகரிப்பு காரணமாக, அகவிலைப்படியில் திருத்தம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை மாதம் அதிகரிக்கிறதா அகவிலைப்படி, சமீபத்திய அப்டேட் இதோ


டிசம்பர் 2021 இல் ஏஐசிபிஐ எண்ணிக்கை 125.4 ஆக இருந்தது. ஆனால், ஜனவரி 2022 இல், அது 0.3 புள்ளிகள் குறைந்து 125.1 ஆக குறைந்தது. பின்னர் பிப்ரவரியில் 0.1 புள்ளிகள் குறைந்து 125.0 ஆக இருந்தது. இருப்பினும், மார்ச் மாதத்தில், 1 புள்ளி உயர்வு இருந்தது. ஏஐசிபிஐ எண்கள் 126 ஐத் தாண்டினால், அரசாங்கம் அகவிலைப்படியை 4 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும். அதாவது ஊழியர்கலின் மொத்த அகவிலைப்படி 38 சதவிகிதம் வரை செல்லக்கூடும்.


சமீபத்தில், ஆறாவது ஊதியக் குழுவின் ஒரு பகுதியாக, லட்சக்கணக்கான ரயில்வே ஊழியர்களின் அகவிலைப்படியை அதிகரித்ததோடு, மத்திய அரசு நிலுவைத் தொகையையும் அளித்தது.  உத்தியோகபூர்வ அறிவிப்பின் படி, டிஏ 14 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


டிஏ 38 சதவீதம் வரை உயரக்கூடும்
அரசு 4% அகவிலைப்படி-யை உயர்த்தினால், மத்திய ஊழியர்களின் டிஏ 34 சதவிகிதத்திலிருந்து 38% ஆக உயரும். இப்போது அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும் என்பதை காணலாம்.


அதிகபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ 56,900
2. புதிய அகவிலைப்படி (38%) - ரூ.21,622/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.19,346/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 21,622-19,346 = ரூ 2,276/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 2,276X12 = ரூ 27,312


குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தின் கணக்கீடு
1. பணியாளரின் அடிப்படை சம்பளம் - ரூ.18,000
2. புதிய அகவிலைப்படி (38%) - ரூ.6840/மாதம்
3. இதுவரையிலான அகவிலைப்படி (34%) - ரூ.6120/மாதம்
4. அகவிலைப்படி அதிகரிப்பு - 6840-6120 = ரூ.720/மாதம்
5. ஆண்டு ஊதிய உயர்வு - 720 X12 = ரூ 8,640


அகவிலைப்படி, தினசரி செலவுக்கான (காஸ்ட்-ஆஃப்-லிவிங்) கொடுப்பனவாக மத்திய அரசு பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு செலுத்தும் தொகையாகும். இது பணவீக்கத்தின் அதிகரித்து வரும் பாதிப்பை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தின் ஒரு அங்கமாகும்.


மேலும் படிக்க | 7th Pay Commission:அகவிலைப்படி அரியர் தொகை பற்றிய பெரிய அப்டேட் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR