7வது ஊதியக்கமிஷன் சமீபத்திய செய்தி: மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது. புதிய ஆண்டு இவர்களுக்கு அகவிலைப்படி அதிகரிப்புடன் துவங்கும். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 2023 ஜனவரியில் அதிகரிக்கப்பட உள்ளது. ஆண்டின் தொடக்கத்தில், அவர்களுக்கு ஒரு ஜாக்பாட் கிடைக்கும். ஏனெனில், இம்முறை ஊழியர்களின் அகவிலைப்படி (டிஏ) 4 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த புதிய உயர்வுக்குப் பிறகு, ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவீதத்தை எட்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது ஊழியர்களுக்கு 38 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகின்றது. ஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு மார்ச் மாதம் வரக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் முதல் வாரத்தில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகக்கூடும்.


தேதி உறுதி செய்யப்பட்டது


2023 ஆம் ஆண்டின் முதல் டிஏ உயர்வு மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும். ஹோலி பண்டிகைக்கு முன்னதாக ஊழியர்கள் இந்தப் பரிசைப் பெறுவார்கள். மார்ச் 1, 2023 அன்று நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், மார்ச் மாதத்தில் 1ஆம் தேதி புதன்கிழமையில் வருகிறது. அடுத்த புதன் 8ஆம் தேதி வருகிறது. ஆனால், மார்ச் 8ம் தேதி ஹோலி பண்டிகை என்பதால், ஹோலிக்கு முன்னதாகவே ஊழியர்களுக்கு அரசு இந்த பரிசை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வந்துள்ள தொழில்துறை பணவீக்கத்தின் புள்ளிவிபரங்களின்படி, அகவிலைப்படி உயர்வு 4 சதவீதம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நடந்தால், ஊழியர்கள் பெறும் டிஏ 42 சதவீதமாக உயரும்.


புதிய ஆண்டில் ஃபிட்மெண்ட்ட் ஃபாக்டர் பற்றிய விவாதம் நடக்கும்


புதிய ஆண்டில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பற்றி அரசு விவாதிக்கக்கூடும். ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு தனித் திட்டத்தை உருவாக்க அரசு தயாராகி வருவதே இதன் காரணமாகும். இதற்காக, 2024ம் ஆண்டுக்கு முன், இத்திட்டத்தின் வரைவை தயார் செய்ய அரசு விரும்புகிறது. பொதுத்தேர்தலுக்கு முன் அரசு ஊழியர்களுக்கு இந்த பரிசுகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதில், ஃபிட்மெண்ட் ஃபாக்டர்  திருத்தமும் ஒன்றாகும்.  


மேலும் படிக்க | 7th Pay Commission: 2023-ல் அரசு ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பார்ட்! 


இருப்பினும், ஊதியக் குழுவின் அரசியலமைப்பின் அடிப்படையில் தகுதித் திருத்தம் செய்யப்படுகிறது. ஆனால், ஊதிய கமிஷனுக்குப் பதிலாக வேறு ஏதாவது வழியில் ஊழியர்களின் பணத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணமாக உள்ளது. இதனால், ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரித்து, தானியங்கி ஊதிய திருத்தத்திற்கான ஃபார்முலாவை அரசு உருவாக்கக்கூடும்.


அகவிலைப்படியின் அடிப்படையில் ஊதியத்தில் திருத்தம் செய்யப்படும்


ஊதிய திருத்தத்துக்கு, அகவிலைப்படி ஃபார்முலாவிலேயே ஊதிய உயர்வு அளிக்கப்பட வேண்டும் என அரசின் ஒரு சாரார் கூறுகிறார்கள். அதாவது, அகவிலைப்படி அதிகரிக்க அதிகரிக்க, ஊழியர்களின் ஊதியமும் அதிகரித்துக்கொண்டே இருக்கும். ஊதிய கமிஷனுக்கான தேவையை நீக்கும் திட்டம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களின் பணியும், திறனும் மதிப்பிடப்பட வேண்டும் என்ற புதிய விதியும் இதில் சேர்க்கப்படலாம். 


ஒவ்வொரு ஆண்டும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடப்பது போலவே அரசு ஊழியர்களுக்கும் பணி சார்ந்த மதிப்பீடு (அப்ரெய்சல்) இருக்கும். எனினும், இதுவரை இதற்கான முன்மொழிவு வரவில்லை. புதிய ஊதியக் குழுவின் படி, ஊழியர்களின் ஊதியம் அதிகரிக்கப்படாது என்றும், அதற்கு பதிலாக, புதிய ஃபார்முலாவுக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அரசுத் துறைகளின் உயர் அதிகாரிகளும் குறிப்பிட்டுள்ளனர்.


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ நிலுவைத்தொகை பற்றிய முக்கிய அப்டேட், ஊழியர்களுக்கு ட்விஸ்ட் காத்திருக்கிறதா? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ