7வது ஊதியக்குழு, அகவிலைப்படி கணக்கீடு ஜனவரி 2024: மத்திய ஊழியர்களுக்கு சமீபத்தில் பண்டிகை பரிசுகள் கிடைத்துள்ளன. போனஸ், அகவிலைப்படி உயர்வு, 3 மாத நிலுவைத் தொகை, இதெல்லாம் தீபாவளி பண்டிகைக்கு முன் கிடைப்பதால் ஊழியர்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், வரப்போகும் புத்தாண்டு அவர்களுக்கு இன்னும் சிறப்பான பரிசை தரப்போகிறது. குறிப்பாக அகவிலைப்படியின் முன், வலுவான நல்ல செய்தி காத்திருக்கிறது. ஜூலை 1, 2023 முதல், அகவிலைப்படி 46 சதவீதமாக திருத்தப்பட்டது. இதற்குப் பிறகு, 2024 ஜனவரியில் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை திருத்தப்படும். இந்தத் திருத்தம் இன்றுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய திருத்தமாக இருக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகவிலைப்படியை 5 சதவீதம் அதிகரிக்க முடியுமா?
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு பல வழிகளில் முக்கியமானதாக இருக்கப் போகிறது. அதன்படி புதிய சம்பள கமிஷன் தொடர்பாக சில உறுதியான விவாதங்கள் நடைபெறலாம். மேலும், அகவிலைப்படி (DA) 50 சதவீதத்தை தாண்டும் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம், போக்கைப் பார்த்தால், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி (டிஏ) கடந்த 4 முறை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், அவர்கள் புத்தாண்டில் ஒரு பெரிய பரிசைப் பெறலாம். அதாவது அடுத்த ஆண்டு அகவிலைப்படியில் 5 சதவீதம் என்ற மிகப் பெரிய அதிகரிப்பு பெறலாம் என்று கூறப்படுகிறது.


மேலும் படிக்க | அதிரடி வட்டியை அள்ளிக்கொடுக்கும் ரிசர்வ் வங்கி: உடனே முதலீடு செய்யுங்கள்


ஏஐசிபிஐ இன்டெக்ஸ் அகவிலைப்படி மதிப்பெண்ணை தீர்மானிக்கும்
அகவிலைப்படி 5 சதவீதம் அதிகரிப்பு என்பது நிச்சயமா? தற்போதைய போக்கின் படி, அகவிலைப்படி 51 சதவீதத்தை எட்டும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இது நடந்தால், 5 சதவீதம் பெரிய ஜம்ப் இருக்கும். இருப்பினும் இந்த அகவிலைப்படியானது AICPI குறியீட்டிலிருந்து மட்டுமே கணக்கிடப்படுகிறது. குறியீட்டில் பல்வேறு துறைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பணவீக்க தரவு பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் ஊழியர்களின் கொடுப்பனவு எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.


தற்போதைய நிலை என்ன?
தற்போதைய நிலவரத்தைப் பார்த்தால், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் வெளியாகியுள்ளன. விரைவில் செப்டம்பர் மாதத்திற்கான புள்ளி விவரங்களும் வெளியாகும். தற்போது குறியீட்டு எண் 139.2 புள்ளிகளில் உள்ளது, இதன் காரணமாக அகவிலைப்படி 47.98 சதவீதத்தை எட்டியுள்ளது.


இந்த எண்ணிக்கை செப்டம்பரில் 48.50 சதவீதத்தை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் தரவுகள் ஜனவரி 2024 இல் எவ்வளவு DA அதிகரிக்கும் என்பதைத் தீர்மானிக்கும். இருப்பினும், இதற்கு நாம் டிசம்பர் 2023 ஏஐசிபிஐ குறியீட்டு எண்களுக்காக காத்திருக்க வேண்டும்.


அகவிலைப்படியில் பெரும் ஏற்றம் இருக்கும்:
7வது ஊதியக் குழுவின் கீழ், ஜூலை முதல் டிசம்பர் 2023 வரையிலான AICPI எண்கள் மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படியைத் தீர்மானிக்கும். அகவிலைப்படி சுமார் 48 சதவீதத்தை எட்டியுள்ளது. இன்னும் நான்கு மாத எண்கள் வரவில்லை. மேலும் 3 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.


அந்த வகையில் வரும் 2024 ஜனவரியில் அகவிலைப்படியில் 5 சதவீதம் அதிகரிப்பு காணப்படலாம். அகவிலைப்படி கால்குலேட்டர் (டிஏ கால்குலேட்டர்) மீதமுள்ள மாதங்களில் 1 புள்ளி அதிகரிப்பைக் காட்டுகிறது, எனவே அகவிலைப்படியில் 5 சதவீதம் அதிகரிப்பு காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | டார்க் வெப்பில் 815 மில்லியன் ஆதார் தரவுகள் விற்பனைக்கு ரெடி! அதிர்ச்சித் தகவல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ