7வது ஊதியக்குழு புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை சமீபத்தில் மத்திய அரசு 34 சதவீதமாக உயர்த்தியுள்ளது. ஏப்ரல் மாத சம்பளத்தில், ஊழியர்களின் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி மற்றும் 3 மாத நிலுவைத் தொகை இரண்டும் வரும். ஆனால், ஜூலை 2022ல் மீண்டும் டிஏ திருத்தம் செய்யப்பட உள்ளது. எனினும் இந்த செயல்முறைக்கான துவக்கம் சரியாக இல்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்ச் தரவு ஏப்ரல் 30 அன்று வரும்


ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில், அதாவது ஜனவரி-பிப்ரவரி 2022 இல், அகவிலைப்படியின் போக்கு எதிர்மறையாக இருந்தது. அதாவது ஏஐசிபிஐ குறியீட்டின் புள்ளிவிவரங்களில் சரிவு காணப்படுகின்றது. இப்போது மார்ச் மாதத்திற்கான புள்ளிவிவரங்கள் வரவுள்ளன. 


இந்த எண்ணிக்கை ஏப்ரல் 30 அன்று வரும். இருப்பினும், தற்போதைய போக்கின்படி பார்த்தால், அகவிலைப்படி அதிகரிக்கும் என்ற நம்பிக்கை இல்லை. அடுத்த அகவிலைப்படி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது ஜூலையில் அறிவிக்கப்பட உள்ளது.


அகவிலைப்படி அதிகரிப்புக்கான எதிர்பார்ப்பு குறைவு: இதுவே காரணம் 


ஏழாவது ஊதியக் குழுவின் படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை மாற்றியமைக்கப்படுகிறது. முதல் முறை ஜனவரியிலும், இரண்டாவது முறை ஆறு மாதங்களுக்குப் பிறகு ஜூலையிலும் இந்த திருத்தம் செய்யப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டிற்கான முதல் அகவிலைப்படி மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மத்திய அரசு அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தியது. 


மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம், Fitment Factor-ல் மாற்றம் இருக்காது


நுகர்வோர் பணவீக்கமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், தொழில்துறை தொழிலாளர்கள் மட்டத்தில், தற்போதைய விகிதத்தை விட எண்ணிக்கை சிறப்பாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், தற்போது வந்துள்ள எண்களின் அடிப்படையில், அடுத்த அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இன்னும் 3 மாதங்களுக்கான தரவுகள் வரவேண்டியுள்ளது. 


ஏஐசிபிஐ எண்ணிக்கையில் எவ்வளவு சரிவு?


கடந்த ஆண்டு டிசம்பர் 2021 இல், ஏஐசிபிஐ 125.4 ஆக இருந்தது. ஒரு மாதம் கழித்து, ஜனவரி 2022 இல், அது 0.3 புள்ளிகள் சரிந்து 125.1 ஆக இருந்தது. பிப்ரவரியில் அது மேலும் சரிந்து 125 ஆகக் குறைந்தது. இந்த வீழ்ச்சியின் காரணமாக, ஜூலை மாதத்தில் அகவிலைப்படி அதிகரிக்கபடுவது சாத்தியமா என தெரியவில்லை. மார்ச் மாத ஏஐசிபிஐ எண்ணிக்கை இன்னும் கீழே சென்றால், அகவிலைப்படி அதிகரிக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு. எண்ணிக்கை 124க்குக் கீழே போனால் அகவிலைப்படியில் மாற்றம் இல்லாமல் நிலையாக வைக்கப்படலாம். 


7வது ஊதியக் குழுவின் படி, ஜூலை 2022ல் அகவிலைப்படி அதிகரிக்கும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது. மார்ச் முதல் ஜூன் வரையிலான தரவுகளாலும் குறியீடும் பாதிக்கப்படும். மார்ச் முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டில் முன்னேற்றம் ஏற்பட்டால், மத்திய ஊழியர்களுக்கு மீண்டும் டிஏ குறித்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும். ஆனால் குறியீடு கீழே சென்றால், டிஏ அதிகரிக்கும் என்ற நம்பிக்கை இருக்காது.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஏப்ரல் மாத சம்பளத்தில் எவ்வளவு அதிகரிப்பு இருக்கும்? கணக்கீடு இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR