ஆந்திராவில் பள்ளி வகுப்பறையை மணமேடையாக்கி +2 மாணவிக்கு +2 மாணவர் ஒருவர் தாலிகட்டியுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திர மாநிலம் (Andhra Pradesh) ராஜமுந்திரியில், அரசுப்பள்ளி வகுப்பறையில் சக மாணவிக்கு தாலிகட்டிய சிறுவன் உள்ளிட்ட 3 பேர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும், சிறுவர் திருமண பாதுகாப்பு சட்டம், 2006 இன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த இளைஞர்கள், சுமார் 17 வயதுடையவர்கள், இடைநிலை மட்டத்தில் படிக்கும் வகுப்பு தோழர்கள் என்று ஆந்திர மாநில மகிலா கமிஷன் தலைவர் வசிரெட்டி பத்மா தெரிவித்தார்.



ALSO READ | நிர்வாணமாக வீட்டு வேலை செய்யும் பெண்கள்: 1 மணி நேரத்திற்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?


இந்த திருமணம் கடந்த மாதம் 17 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் (Social Media) வெளியானதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரல் வீடியோ மற்றும் புகைப்படங்கள் கல்லூரி முதல்வரின் பார்வைக்கு சென்ற நிலையில் திருமணம் செய்து கொண்ட இரண்டு பேர் மற்றும் திருமனத்திற்கு உதவிய மற்றொரு மாணவி ஆகிய மூன்று பேரையும் பள்ளியில் இருந்து டி.சி. வழங்கி வீட்டுக்கு அனுப்பி உள்ளார்.



இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இந்த காட்சிகள் தலைமை ஆசிரியரின் கவனத்துக்கு சென்றது. இதையடுத்து திருமணம் செய்துகொண்ட இரு சிறுவர்கள் மற்றும் அவருக்கு உதவிய ஒரு மாணவி ஆகியோரை பள்ளியில் இருந்து நீக்கியும், மாற்று சான்று அளித்தும் தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR