Milk For Glowing Skin: தற்போது ஒரே சமயத்தில் வெயில் மற்றும் மழை என மாறி மாறி வருகிறது. இதனால் சருமத்தை பாதுகாப்பது மிகவும் கடினமான செயலாக உள்ளது. பெண்களை போலவே ஆண்களும் பளபளப்பான சருமத்தை பெறவே விரும்புகின்றனர். இதற்காக பல செயற்கை தயாரிப்புகள் தொடங்கி, பியூட்டி பார்லர் செல்வது வரை பல வகையில் பணத்தை வீணடிக்கின்றனர். ஆனாலும் அவர்கள் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைப்பதில்லை. மேலும் அவை சருமத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன. எனவே சரும பாதுகாப்பை பலப்படுத்த எப்போதும் இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும். இயற்கையாகவே கிடைக்கக்கூடிய பல பொருட்கள் சருமத்திற்கு கூடுதல் நன்மைகளை தருகின்றன. அந்த வகையில் சருமத்திற்கு பால் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆனால் பாலை எப்படி பயன்படுத்தினால் முகம் பளபளப்பாக மாறும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஒரு மாதம் தினமும் இளநீர் குடித்து வந்தால்... மாற்றத்தை நீங்களே உணருவீர்கள்..!!


மழைக்காலத்திலும் பளபளப்பான சருமத்தை பெற பாலை பின்வரும் வழிகளில் பயன்படுத்தலாம். இதன் மூலம் இந்த சமயத்தில் வரும் பருக்கள் மற்றும் முகத்தில் ஏற்படும் புள்ளிகளை நீக்க முடியும். மேலும் உங்கள் சருமத்தை குறைபாடற்ற பளபளப்பாக மாற்ற முடியும். பாலில் வைட்டமின் ஏ, டி மற்றும் ஈ நிறைந்துள்ளது. வெயிலினால் ஏற்படும் தீங்குகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது, இது ஒரு இயற்கையான தோல் எக்ஸ்ஃபோலியண்ட் ஆகும், இதை நீங்கள் சருமத்தின் அழகை அதிகரிக்க பயன்படுத்தலாம்.


பால் குளியல்: பளபளப்பான சருமத்தை பெற மாதம் ஒருமுறை பால் குளியல் செய்யலாம். இதற்கு 3 கப் பாலில் புதினா இலைகள் சேர்த்து, அதில் கோகோ பவுடர், தண்ணீர், உப்பு மற்றும் சோள மாவு சேர்த்து கொள்ளவும். ஒரு பெரிய கிண்ணத்தில் இவை அனைத்தையும் நன்கு கலந்து, ஒரு பாக்கெட் தண்ணீரில் கலக்கவும். இதன் மூலம் உங்கள் சருமம் பளபளப்பாக மாறும்.


சுத்தப்படுத்தும் பால்: இயற்கை கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே க்ளென்சிங் பாலை தயார் செய்யலாம். இதற்கு பாலுடன் தேன் மற்றும் மஞ்சள் கலந்து கிளென்சிங் மில்க் தயார் செய்யலாம். இந்த க்ளென்சிங் பாலில் தினமும் முகத்தை சுத்தம் செய்யலாம். தினமும் இரவில் தூங்கும் முன் முகத்தை சுத்தம் செய்வதன் மூலம் அதிக பலன்கள் கிடைக்கும். இரவு முழுவதும் அதன் சத்து சருமத்தில் இருக்கும்.


ஃபேஸ் பேக்கை: பளபளப்பான சருமத்தை பெற பச்சை பாலை பயன்படுத்தி ஃபேஸ் பேக் தயார் செய்யலாம். இதற்கு, பச்சரிசி மாவு, முல்கனி மிட்டி, மஞ்சள், தேன் மற்றும் பச்சை பால் கலந்து ஃபேஸ் பேக் தயார் செய்யவும். இந்த ஃபேஸ் பேக்கை தினமும் குளிப்பதற்கு முன் முகத்திற்கு தடவ வேண்டும். வாரம் இருமுறை இப்படி செய்தால் முகம் பளபளப்பாக மாறும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இன்சுலினை சுரப்பை அதிகரித்து... எகிறும் சுகர் லெவலை குறைக்கும் நித்திய கல்யாணி..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ