சருமம் அழகு பெற டிப்ஸ்: கற்றாழை ஒன்று மட்டுமல்ல பல வழிகளில் சரும பராமரிப்பில் உபயோகிக்கலாம். இதில் பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் ஈ போன்ற சருமத்திற்கு நன்மை பயக்கும் கூறுகள் உள்ளன. கற்றாழையை முகத்தில் தடவினால் சருமம் மென்மையாக மாறுவதுடன், சருமத்திற்கு வயதாவதை தடுக்கும் தன்மையும் கிடைக்கும். தற்போது பருவநிலை மாறத் தொடங்கியுள்ளது, இதுபோன்ற சூழ்நிலையில் கற்றாழையை தினமும் முகத்தில் சரியாகப் பூசி வந்தால், சருமத்திற்கு ஒன்றல்ல பல நன்மைகள் கிடைக்கும். எனவே கற்றாழை ஜெல்லை (Aloe Vera) எப்படி இரவில் முகத்தில் தடவலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கற்றாழையை முகத்தில் தடவுவது எப்படி?  | How To Apply Aloe Vera On Face


கற்றாழையை அப்படியே டைரக்ட்டாக முகத்தில் பூசலாம். இதற்கு கற்றாழை ஜெல்லை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் தடவி விட்டு தூங்க வேண்டும். கற்றாழையை இரவு முழுவதும் முகத்தில் வைக்க விரும்பவில்லை என்றால், 15 நிமிடங்களுக்குப் பிறகு கழுவுவதன் மூலம் அதை அகற்றலாம்.


மேலும் படிக்க | பற்களின் மஞ்சள் அடுக்கு நீங்கனுமா?, இந்த 4 வீட்டு வைத்தியம் மட்டும் போதும்


கற்றாழை மற்றும் ரோஸ் வாட்டர்: கற்றாழை ஜெல்லுடன் ரோஸ் வாட்டரை கலந்து இரவில் முகத்தில் தடவலாம். இது சருமத்திற்கு இனிமையான விளைவுகளைத் தருவது மட்டுமல்லாமல், சருமத்தை பளபளப்பாகவும் மாற்றுகிறது.


கற்றாழை மற்றும் ஆரஞ்சு தோல்
ஆரஞ்சு பழத்தோலை உலர்த்தி பொடியாக அரைக்கவும். அதன் பின்னர் கற்றாழை ஜெல்லில் ஆரஞ்சு தோல் பொடியை கலந்து ஃபேஸ் பேக் செய்யலாம். இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தடவி பின் கழுவவும். சருமம் பளபளக்க ஆரம்பிக்கும்.


கற்றாழை மற்றும் தேன்
இந்த ஃபேஸ் பேக்கை இரவிலும் போடலாம். இந்த ஃபேஸ் பேக்கை தயார் செய்ய, முதலில் கற்றாழை ஜெல்லில் தேன் மற்றும் சிறிதளவு பால் கலந்து பேஸ்ட் தயார் செய்யவும். இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் 10 நிமிடம் தடவி பின் கழுவவும். குறிப்பாக வறண்ட சருமத்திற்கு இந்த ஃபேஸ் பேக் சிறந்தது.


முல்தானி மிட்டி மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்: இந்த பேக் தயார் செய்ய, கற்றாழை ஜெல் மற்றும் தண்ணீருடன் முல்தானி மிட்டியை கலந்து பேஸ்ட் செய்யவும். கண் பகுதியை விட்டு, முழு முகத்திலும் இந்த பேக்கை நன்கு தடவவும். சுமார் 15-20 நிமிடங்கள் உலர விடவும். இதற்குப் பிறகு, முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.


கற்றாழை மற்றும் மஞ்சள்
இரவில் கற்றாழையுடன் ஒரு சிட்டிகை மஞ்சளைச் சேர்த்து முகத்தில் தடவினால் சருமம் பொலிவாக இருக்கும். இந்த பேஸ்ட்டை முகத்தில் நன்கு தடவவும். நீங்கள் விரும்பினால், இந்த பேஸ்ட்டை இரவு முழுவதும் வைத்திருக்கலாம். இதன் மூலம் முகத்தில் ஒரு தங்கப் பளபளப்பு தோன்றும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | அசிங்கமான மஞ்சள் நிற பற்களை நொடியில் வெள்ளையாக்க இந்த வீட்டு வைத்தியம் போதும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ