என்ன தான் கடவுள் இயற்கையாக நமக்கு அழகு கொடுத்து இருந்தாலும் மார்க்கெட்டில் விற்கும் எண்ணற்ற அழகு சாதன பொருட்களை வாங்கி மேலும் தங்கள் அழகு கூடுவதற்க்காக பயன் படுத்துகிறோம். சொல்லப்போனால், அழகு சாதன பொருட்கள் குழந்தைகள் முதல் பெரியோர்களையும் விட்டு வைக்கவில்லை என்பதே உண்மை. எத்தனை பேருக்கு தெரியும் இந்த அழகு சாதன பொருட்களில் இரசாயனம் கலந்திருக்கிறது என்று?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நாம் பயன்படுத்தும் மேக்கப் பொருட்களில் இரசாயனம் கலந்துருக்கிறது. இதை பயன்படுத்தும் போது மிகுந்த எச்சிரிக்கை தேவை. மேலும் அழகு சாதன பொருட்களினால் ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.



வியர்வை நாற்றத்தை போக்க பயன்படுத்தும் வாசனை திரவியங்கள், ஹேர் மற்றும் பாடி லோஷன்கள், தலைக்குப் போடும் ஸ்பிரேய் மற்றும் ஷாம்பு என அனைத்து விதமான அழகு சாதன பொருட்களில் ரசாயனங்கள் உள்ளன. இவை கடுமையான விளைவுகளை நம் உடலில் ஏற்படுத்தக்கூடியவை.



எனவே இதை வாங்கும் போது நன்றாக படித்து பார்த்து வங்க வேண்டும். உடம்பை பாதிக்க கூடிய ரசாயனங்கள் உள்ளதா இல்லையா என்று கவனிக்க வேண்டும்.



இதற்கு மாற்றாக இரசாயன கலப்பில்லாத அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.