இந்து மதத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. சனிக்கிழமை நீதியின் கடவுளான சனி பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் சனிபகவானை வழிபடுவதன் மூலம், பகவான் மகிழ்ச்சி அடைகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் இதன் மூலம் சனி கிரகம் ஜாதகத்தில் வலுப்பெற்று சுப பலன்களைத் தரத் தொடங்குகிறது. சனிபகவானின் அதிருப்தி வாழ்க்கையை அழிக்கும் என்பதால் நல்ல வாழ்வு பெற சனிபகவானின் அருள் மிகவும் அவசியம். இன்று சனியின் அருள் உங்கள் மீது பொழியப் போகிறது என்று கூறும் சகுனங்களை பற்றி அறிந்து கொள்ளலாம். முக்கியமாக, உங்களுக்கு பண வரவு, வெற்றியும் கிடைக்கும்.


சனிக்கிழமையில் சில விஷயங்கள் கண்ணில் படுவது சனியின் ஆசீர்வாதத்தைப்  நீங்கள் பெறப் போகிறீர்கள் என்பதை உணர்த்துகிறது. சனி பகவானுடன் தொடர்புடைய இந்த விஷயங்களை, சனிக்கிழமையன்று பார்ப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த அறிகுறிகள் காணப்பட்டால், தூங்கும் அதிர்ஷ்டமும் எழுந்திருக்கப் போகிறது என்று கூறலாம்.


மேலும் படிக்க | குரு பெயர்ச்சி, எந்தெந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் 


 துப்புரவுப் பணியாளர்கள் - சனிக்கிழமையன்று துப்புரவுப் பணியாளர்கள் சாலையைச் சுத்தம் செய்வதைக் கண்டால், அது மிகவும் சுபமான சகுனம். நீங்கள் எந்த வேலைக்காக வெளியில் சென்ல்கிறிர்களோ, அந்த வேலையில் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். முடிந்தால், துப்புரவு செய்பவருக்கு தானம் கொடுங்கள்.


பிச்சைக்காரன்- ஆதரவற்றோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்பவர்கள் மீது சனி தேவன் என்றென்றும் அருளைப் பொழிவார். சனிகிழமையில் ஆதரவற்றோர்களை நீங்கள் கண்டால், கண்டிப்பாக அவருக்கு ஏதாவது தானம் செய்யுங்கள்., அவ்வாறு செய்வதால் சனிபகவானின் அருள் உங்களுக்கு பொழியும். எந்த ஒரு பிச்சைக்காரனையோ அல்லது ஆதரவற்றவர்களையோ தவறுதலாக கூட அவமதிக்க கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


கருப்பு நாய் - கருப்பு நாய் சனி தேவரின் வாகனமாக கருதப்படுகிறது. சனிக்கிழமை காலை சாலையில் ஒரு கருப்பு நாயைக் கண்டால், சனியின் அருள் உங்கள் மீது பொழியப் போகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். கருப்பு நாய்க்கு சாப்பிட ஏதாவது கொடுங்கள். ஜாதகத்தில் சனி அசுப நிலையில் இருப்பவர்கள் தெருநாய்களுக்கு உணவு அளிப்பதால்பல நன்மைகள் கிடைக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | செல்வங்களை அள்ளி தரும் சுக்கிரனை வலுப்படுத்த செய்ய வேண்டிய பரிகாரங்கள்..!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR