7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாக உள்ளது. ஜூலை 2023ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி பெரிய அளவில் அதிகரிக்கக்கூடும். இது தவிர, பயணப்படியும் (டிஏ) அதிகரிக்கலாம். இதுமட்டுமின்றி, இந்த நிதியாண்டின் இறுதியில், ஊழியர்களின் பணி மதிப்பீடு (அப்ரெய்சல்) குறித்த பெரிய எதிர்பார்ப்பும் உள்ளது. மேலும், ஜூலை மாத அகவிலைப்படி அக்டோபர் மாத சம்பளத்தில் வழங்கப்படும். ஆகையால் ஊழியர்களுக்கு 3 மாத டிஏ பாக்கியும் கிடைக்கும். இதன் மூலம் ஜூலை 2023க்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகமாக உயரும் என்பது தெளிவாகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊழியர்கள் இந்த கொடுப்பனவுகளைப் பெறுவார்கள்


மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு மட்டும் அல்ல, இது தவிர மற்ற கொடுப்பனவுகளும் கிடைக்கும். பயண கொடுப்பனவு (டிராவல் அலவன்ஸ்) மற்றும் நகர கொடுப்பனவும் (சிடி அலவன்ஸ்) இதில் அடங்கும். அதே நேரத்தில், அகவிலைப்படி அதிகரிப்பின் காரணமாக, அவர்களின் ஓய்வூதியப் பலன்கள், வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடை போன்றவற்றில் பெரிய அதிகரிப்பு ஏற்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு பெருமளவிலான ஊதிய உயர்வு இருக்கும். 


3 மாத நிலுவைத் தொகையைச் சேர்த்து நல்ல தொகை கிடைக்கும்


மத்திய அரசு ஊழியர்களின் அடுத்த அகவிலைப்படி ஜூலை 2023 முதல் அமலுக்கு வரும். வரும் நாட்களில், CPI-IW குறியீட்டின் எண்ணிக்கையின் அடிப்படையில் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பது தெளிவாகும். ஜனவரி 2023 முதல் ஜூன் 2023 வரையிலான பணவீக்க புள்ளிவிவரங்கள் அகவிலைப்படியின் அதிகரிப்பு அளவை தீர்மானிக்கும்.


மேலும் படிக்க | 8th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, விரைவில் 44% ஊதிய உயர்வு


அதன் பிறகு அக்டோபரில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும். இந்த அதிகரிப்பு அக்டோபர் மாதம் அறிவிக்கப்படக்கூடும் என்றாலும், இது ஜூலை முதல் பொருந்தும். அந்த நிலையில், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாத நிலுவைத் தொகையும் (டிஏ ஏரியர்ஸ்) ஊழியர்களுக்கு கிடைக்கும், நிலுவைத் தொகை கிடைப்பதால், ஊழியர்களின் கணக்கில் பெரும் தொகை வரும்.


அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கலாம்


மத்திய அரசு ஊழியர்களின் 2023 ஜனவரிக்கான அகவிலைப்படி மார்ச் மாதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 4 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், இப்போது அடுத்த விலை உயர்வு ஜூலையில் இருக்கும். AICPI குறியீட்டின் எண்களால் தீர்மானிக்கப்படும் அகவிலைப்படிக்கான 2 மாத எண்கள் வந்துள்ளன.


ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் குறியீடு 44 சதவீதத்தை எட்டியுள்ளது. அதாவது 2 சதவீதம் கூடுதல் அகவிலைப்படி அதிகரித்துள்ளது. ஆனால், மொத்த எண்கள் ஜூன் மாதத்துக்குள்தான் கிடைக்கும். ஆகையால், அகவிலைப்படி எவ்வளவு உயரும் என்பது ஆகஸ்ட் மாதம் தெரிந்துவிடும். அடுத்த அதிகரிப்பு 4 சதவீதமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், மொத்த அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரிக்கும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட், அகவிலைப்படி உயர்வு, மற்றொரு குட் நியூஸ்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ