7வது ஊதியக்குழுவின் சமீபத்திய செய்திகள்: மோசமான வானிலை காரணமாக காய்கறிகள் விலை தொடர்ந்து உயர்ந்துக் கொண்டே இருக்கிறது, இதன் விளைவு பணவீக்க விகிதத்திலும் காணப்படுகிறது. இப்போது பணவீக்கம் அதிகரித்துள்ளதால், அகவிலைப்படியை உயர்த்துமாறு மத்திய ஊழியர்கள் அரசுக்கு தொடர்ந்து அழுத்தத்தை கொடுத்து வருகின்றது. அரசாங்கம் அகவிலைப்படியை (Dearness Allowance) 3 சதவீதம் அதாவது 45 சதவீதம் வரை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி அகவிலைப்படி (DA Hike) உயர்வு  (7th Pay Commission) விரைவில் அறிவிக்கப்படும், மேலும் இது ஜூலை 1, 2023 முதல் பொருந்தும் என்று கருதப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகவிலைப்படியை 3 சதவீதம் வரை உயர்த்தப்படலாம்
உண்மையில், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி (DA) ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அகவிலைப்படி (டிஏ) அதிகரிப்பின் அளவு ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும் தொழிலாளர் துறையால் வெளியிடப்படும் AICPI (All India Consumer Price Index) குறியீட்டின் தரவைப் பொறுத்தது. ஆனால் அகவிலைப்படிக்கு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் தரவு மதிப்பாய்வு செய்யப்படுகிறது. இந்தத் தரவுகளின் அடிப்படையில், முதல் உயர்வு ஜனவரியிலும், இரண்டாவது ஜூலையிலும் செய்யப்படுகிறது.


மேலும் படிக்க | உங்கள் PF கணக்கில் வட்டி பணம் எப்போது டெபாசிட் செய்யப்படும், இதோ அப்டேட் 


அகவிலைப்படி 45 ஆக உயரும்
ஜூன் மாதம் வரையிலான புள்ளிவிவரங்கள் வெளியான பிறகு, அகவிலைப்படியில் 3 சதவீதம் அதிகரிப்பு நிர்ணயிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. மேலும் தீபாவளி பண்டிகைக்கு முன் எந்த நேரத்திலும் புதிய டிஏ (அகவிலைப்படி) விகிதங்களை அரசாங்கம் அறிவிக்கலாம் என நம்பப்படுகிறது. தற்போது மத்திய ஊழியர்களின் டிஏ (அகவிலைப்படி) 42% ஆக உள்ளது, இது ஜனவரி முதல் ஜூன் 2023 வரை பொருந்தும். அடுத்த அகவிலைப்படி ஜூலை முதல் டிசம்பர் 2023 வரை பொருந்தும். இது இந்த ஆண்டின் இரண்டாவது உயர்வு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


செப்டம்பர் மாதத்தில் அகவிலைப்படி அதிகரிக்கப்படலாம்
இந்நிலையில் அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் மாதத்தில் அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்கலாம் என்றும், அதன் பிறகு ஊழியர்களின் டிஏ (Dearness Allowance) 45 சதவீதமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜூலை 1, 2023 முதல் நடைமுறைப்படுத்தப்படும், இதில் 2 மாத நிலுவைத் தொகையும் வழங்கப்படும். இதன் மூலம் 1 கோடி ஊழியர்கள்-ஓய்வூதியம் பெறுவோர் பன்மடங்கு பயனடைவார்கள். முன்னதாக மார்ச் 2023 இல், அகவிலைப்படி ((Dearness Allowance Hike News) 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது.


இதனிடையே ஊடக அறிக்கைகளின்படி, 2023 ஆம் ஆண்டிற்கான CPI-IW ஜூலை 31, 2023 அன்று வெளியிடப்பட்டது என்று அகில இந்திய ரயில்வே மேன்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஷிவ் கோபால் மிஸ்ரா தெரிவித்தார். அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் டிஏ (DA Hike) அதிகரிப்பு 3 சதவீதத்திற்கும் சற்று அதிகம். அரசு அகவிலைப்படியை தசமமாக அதிகரிக்காது. இது டிஏவில் 3 சதவிகிதம் அதிகரிக்க வழிவகுக்கும்.


இதயனிடையே மத்தியப் பிரதேசம், ஒடிசா, கர்நாடகா, ஜார்கண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் தங்களுடைய மாநில அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படியை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | EPFO வட்டி மற்றும் வரவை வீட்டில் இருந்தே சரிபார்க்க வேண்டுமா? 4 ஈஸியான வழிமுறைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ