ஊழியர்களுக்கு 3 நல்ல செய்திகள்: 50% டிஏ விரைவில்.. ஊதியம் மற்றும் எச்ஆர்ஏ -வில் அதிரடி உயர்வு

7th Pay Commission: கூடிய விரைவில் மத்திய அரசு, ஊழியர்களுக்கு 3 பெரிய நல்ல செய்திகளை அளிக்கவுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 4, 2023, 02:32 PM IST
  • இன்னும் சில மாதங்களில் 50% அகவிலைப்படி
  • அதன் பிறகு அதிரடி சம்பள உயர்வு.
  • வீட்டு வாடகை கொடுப்பனவிலும் மாற்றம்.
ஊழியர்களுக்கு 3 நல்ல செய்திகள்: 50% டிஏ விரைவில்.. ஊதியம் மற்றும் எச்ஆர்ஏ -வில் அதிரடி உயர்வு title=

ஏழாவது சம்பள கமிஷன், சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி. ஊழியர்களின் அகவிலைப்படி விரைவில் பெரிய ஏற்றத்தை காணவுள்ளது. இன்னும் சில மாதங்களில் அகவிலைபப்டி 50 சதவிகிதத்தை எட்டும் என கூறப்படுகிறது. 50 சதவிகித அகவிலைப்படி என்பது ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது. அகவிலைப்படி 50 சதவிகிதத்தை எட்டினால் அதன் பிறகு ஊதியத்திலும், பல கொடுப்பனவுகளிலும் மாற்றம் ஏற்படும். அதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.

தொழிலாளர் அமைச்சகம் சமீபத்தில் ஏஐசிபிஐ குறியீட்டு எண்களை அறிவித்தது. இதன் அடிப்படையில் ஜூலை 2023 வரையிலான அகவிலைப்படி ஏற்றம் 46 சதவிகிதம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை விரைவில் மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் மத்திய அரசு அகவிலைப்படி (டிஏ), அகவிலை நிவாரணம் (டிஆர்), ஃபிட்மெண்ட் ஃபாக்டர் மற்றும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் உள்ள பிற உயர்வுகளை மதிப்பாய்வு செய்யும். தற்போது ஊழியர்களுக்கு 42 சதவீத டிஏ வழங்கப்படுகிறது. ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் வந்த பின்னர் இது 46 சதவிகிதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

6 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றம்

மத்திய அரசு தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்படும் ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் 6 மாதங்களுக்கு ஒரு முறை ஊழியர்களின் டிஏ மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஆர் ஆகியவை மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. இதன் அடிப்படையில், முதல் உயர்வு ஜனவரி மாதத்தில் இருந்தது. இரண்டாவது ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும்.

ஜனவரிக்கான அகவிலைப்படி உயர்வு ஹோலி பண்டிகையை ஒட்டி அறிவிக்கப்பட்டது. தற்போது ஜூன் மாதம் முதலான அகவிலைப்படி உயர்வின் அறிவிப்பு செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என கூறப்படுகின்றது. 

கூடிய விரைவில் மத்திய அரசு, ஊழியர்களுக்கு 3 பெரிய நல்ல செய்திகளை அளிக்கவுள்ளது. அவை:

- 50% அகவிலைப்படி
- சம்பள உயர்வு
- வீட்டு வாடகை கொடுப்பனவில் மாற்றம்

50% அகவிலைப்படி

வரும் ஜனவரி 2024 -இல் மீண்டும் அகவிலைப்படி மீண்டும் திருத்தம் செய்யப்படும். கடந்த சில முறைகளை போல இந்த முறையும் அகவிலைப்படியில் 4 சதவிகித அதிகரிப்பு ஏற்பட்டால், ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 50 சதவிகிதத்தை எட்டும். இதனால் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்படும்.

2016 ஆம் ஆண்டின் குறிப்பாணையில், அகவிலைப்படி (DA) 50% அதாவது அடிப்படை சம்பளத்தில் 50% ஆகும்போது, அது பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அகவிலைப்படி பூஜ்ஜியமான பிறகு, மீண்டும் அகவிலைப்படியின் சதவிகிதம் 1, 2 என்ற முறையில் தொடங்கும். அகவிலைப்படி 50 சதவீதத்தை அடைந்தவுடன், அது அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும். 

மேலும் படிக்க | ஊழியர்கள்-ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு குட் நியூஸ்..சம்பளம்-ஓய்வூதியம் உயரும்

சம்பள உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும்? தற்போது, ​​பே-பேண்ட் லெவல்-1 அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ரூ. 18,000 ஆக உள்ளது. இது குறைந்தபட்ச அடிப்படை சம்பளம். ஆனால், இதே கணக்கீட்டை 50% அகவிலைப்படியில் பார்த்தால், ஊழியர்களுக்கு 9,000 ரூபாய் கிடைக்கும். அகவிலைப்படி 50 சதவீதம் ஆனவுடன் அது பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டு அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். அதாவது ரூ.18,000 சம்பளம் ரூ.9,000 அதிகரித்து ரூ.27,000 -ஐ எட்டும். இதற்குப் பிறகு, அகவிலைப்படி ரூ.27,000 -இல் கணக்கிடப்படும். டிஏ 0 ஆன பிறகு, அது 3 சதவீதம் அதிகரித்தால், அவர்களது சம்பளத்தில் மாதம் 810 ரூபாய் அதிகரிக்கும்.

HRA: வீட்டு வாடகை கொடுப்பனவு எப்போது அதிகரிக்கும்?

DoPT இன் மெமோராண்டத்தின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவில், அகவிலைப்படி உயர்வின் அடிப்படையில் திருத்தம் செய்யப்படுகிறது. நகரத்தின் வகையின்படி, எச்ஆர்ஏ 27 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 9 சதவீதம் என்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. இந்த உயர்வு 1 ஜூலை 2021 முதலான அகவிலைப்படி உயர்வுடன் அமலில் உள்ளது. 2015 இல் வெளியிடப்பட்ட குறிப்பாணையின்படி, அகவிலைப்படியுடன் எச்ஆர்ஏ -வும் அவ்வப்போது திருத்தப்படும். இப்போது அகவிலைப்படி 50% -ஐத் தாண்டும்போது அந்த திருத்தம் மீண்டும் நடக்க வேண்டும். 

HRA 3% அதிகரிக்கும்

வீட்டு வாடகை கொடுப்பனவில் அடுத்த திருத்தம் 7வது ஊதியக் குழுவின் கீழ் 3% ஆக இருக்கும். எச்ஆர்ஏ தற்போதுள்ள அதிகபட்ச விகிதமான 27 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரிக்கும். ஆனால், அகவிலைப்படி 50% -ஐ அடையும் போதுதான் இது நடக்கும். DA 50% -ஐ தாண்டும்போது, ​​எச்ஆர்ஏ 30%, 20% மற்றும் 10% ஆக உயரும். X, Y மற்றும் Z வகுப்பு நகரங்களின்படி வீட்டு வாடகை கொடுப்பனவு வகை உள்ளது. எக்ஸ் பிரிவில் வரும் மத்திய ஊழியர்கள் 27% எச்ஆர்ஏ பெறுகிறார்கள். இது டிஏ 50% ஆனால், 30% ஆக உயரும். அதே சமயம், ஒய் வகுப்பினருக்கு எச்ஆர்ஏ 18 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயரும். இசட் வகுப்பு மக்களுக்கு 9 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயரும்.

மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ரூ.15144 சம்பளம் உயர்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News