7 ஆவது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு:  நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியரா? அல்லது உங்கள் குடும்பத்தில் வேறு யாராவது மத்திய அரசு ஊழியராக அல்லது ஓய்வூதியம் பெறுபவராக இருக்கிறார்களா? அப்படி இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய அரசு விரைவில் ஊழியர்களின் மனதை கவரும் வகையில் இரண்டு நற்செய்திகளை அளிக்கவுள்ளது. இவற்றின் மூலம் ஊழியர்களின் ஊதியத்தில் நல்ல ஏற்றம் இருக்கும். அனைவரின் மனதையும் கவரும் வகையில், ஊழியர்களின் டிஏ அதிகரிப்புடன் ஃபிட்மென்ட் ஃபாக்டரையும் அரசு விரைவில் உயர்த்த உள்ளது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஃபிட்மெண்ட் ஃபாக்டர்


ஃபிட்மெண்ட் ஃபாக்டர் என்பது மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு முக்கியமான காரணியாகும். இதன் அடிப்படையில் தான் ஊழியர்களின் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படுகின்றது. மத்திய ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை மோடி அரசு உயர்த்தினால், ஊழியர்களுக்கு இது வரை இல்லாத அளவுக்கு சம்பள உயர்வு சாத்தியமாகும் என நம்பப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிப்பு குறித்து மத்திய அரசு விரைவில் புதிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என்றும் இது குறித்த ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


அரசாங்கம் கடைசியாக 2016 இல் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரித்தது. இப்போது மீண்டும் இது அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது நடந்தால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் நல்ல உயர்வு இருக்கும். அதன் மூலம் ஊழியர்களுக்கு மிகப்பெரிய பரிசு கிடைக்கும். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் அரசாங்கம் எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், வரும் மாதங்களில் இதற்கான அறிவிப்பு நிச்சயம் வரும் என ஊடக அறிக்கைகளும் அரசியல் வல்லுநர்களும் தெரிவிக்கின்றனர். 


ஃபிட்மெண்ட் ஃபாக்டர் எவ்வளவு அதிகரிக்கும்? 


மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அரசு இப்போது உயர்த்தினால், அது பல லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் மிக முக்கிய ஒரு விஷயமாக இருக்கும். மத்திய அரசு ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 2.60 மடங்கிலிருந்து 3 மடங்காக அரசாங்கம் உயர்த்தலாம். அதன் பிறகு அடிப்படை ஊதியம் பெரிய அளவில் உயரும்.


மேலும் படிக்க | ஊழியர்களுக்கு பம்பர் செய்தி!! வருகிறது 8th Pay Commission, விரைவில் 44% ஊதிய உயர்வு 


ஃபிட்மெண்ட் ஃபாக்டர் உயர்வு: கணக்கீடு இதுதான்


ஒரு கணக்கீட்டின்படி, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 என்றால், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்பட்டால், அடிப்படை ஊதியத்தில் சுமார் ரூ.8,000 உயர்வது சாத்தியம் என்று கருதப்படுகிறது. இதற்குப் பிறகு, ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ. 26,000 ஆக இருக்கும். அடிப்படை ஊதியம் என்பது அனைத்து ஊழியர்களுக்கும் மிகவும் முக்கியமான ஒரு காரணியாகும். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களின் சம்பளத்தில் சுமார் ரூ.96,000 உயர்வு இருக்கும்.


அகவிலைப்படி குறித்த நல்ல செய்திகள் கிடைக்கும்


மத்திய மோடி அரசாங்கம், மத்திய ஊழியர்களுக்கு கணிசமான அளவில் அகவிலைப்படியை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜூலை 2023 -இல் அரசாங்கம் அகவிலைப்படியை சுமார் 4 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. அதன் பிறகு ஊழியர்களின் டிஏ 46 சதவிகிதமாக அதிகரிக்கும். தற்போது, ​​ஊழியர்கள் 42 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். 


இது இப்போது அதிகரித்தால், ஜூலை 1, 2023 முதல் புதிய அகவிலைப்படி நடைமுறைப்படுத்தப்படும். ஏழாவது ஊதிய விதியின்படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்துகிறது. அதாவது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஊழியர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது. இது பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதில் பயனுள்ளதாக இருக்கும்.


மேலும் படிக்க | DA Hike: காத்திருந்த ஊழியர்களுக்கு நல்ல செய்தி... அகவிலைப்படியை உயர்த்தும் மாநில அரசு! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ