அகவிலைப்படி அதிகரிப்பு சமீபத்திய அறிவிப்பு: அகவிலைப்படி உயர்வின் பலன் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி (டிஏ) உயர்வு ஜூலை 1 முதல் அறிவிக்கப்படலாம். ஆனால், இதுவரையில் அகவிலைப்படி உயர்வு குறித்து அரசு தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை திருத்துவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு நடப்பு நிதியாண்டில் முதல்முறையாக அகவிலைப்படியை அரசு உயர்த்தவுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுவரை வந்துள்ள ஏஐசிபிஐ தரவுகளின் படி, ஊழியர்களின் சம்பளம் ஜூலை மாதம் முதல் 3 முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது. இருப்பினும், இது மே மற்றும் ஜூன் மாதத்திற்கான தரவையும் சார்ந்தது. மே மற்றும் ஜூன் மாதத்திற்கான ஏஐசிபிஐ புள்ளிவிவரங்கள் நன்றாக இருந்தால், அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 4 சதவீதம் அதிகரிக்கக்கூடும். 


ஏஐசிபிஐ  தரவை வெளியிடுவது யார்?


ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில், ஊழியர்களின் அகவிலைப்படியை அரசு எவ்வளவு உயர்த்தும் என்று முடிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் கடைசி வேலை நாளில், அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (ஏஐசிபிஐ) புள்ளிவிவரங்கள் தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்படுகின்றன. இந்த குறியீடு 88 மையங்களுக்கும் மற்றும் நாடு முழுவதற்கும் தயாரிக்கப்பட்டுள்ளது.


4 சதவீத அகவிலைப்படி அதிகரிப்பு


மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. அரசு ஜூலையில் அகவிலைப்படியை மேலும் 4 சதவீதம் உயர்த்தினால், ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதமாக உயரும். ஊடக அறிக்கைகளின்படி, ஏப்ரல் மாதத்திற்கான ஏஐசிபிஐ எண்ணிக்கை 134.2 புள்ளிகள், இதனால் டிஏ மதிப்பெண் 45.06 என்ற நிலையை அடைந்துள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களின் ஏஐசிபிஐ எண்கள் வந்தபின்னர், அகவிலைப்படி 46.40 -ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது டிஏவில் 4 சதவீதம் உயர்வு என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.


மேலும் படிக்க | 8th Pay Commission அட்டகாசமான அப்டேட்: 44% ஊதிய உயர்வு விரைவில்


ஊழியர்களின் சம்பள உயர்வு கணக்கீடு


ஒரு உதாரணம் மூலம் இந்த கனக்கீட்டை புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியரின் மாதச் சம்பளம் ரூ. 20,000 ஆக இருந்தால், 42% டிஏ அடிப்படையில் அவருக்கு அகவிலைப்படி ரூ. 8,400 ஆக இருக்கும். மறுபுறம், 46 சதவீதத்தின்படி டிஏ கணக்கீட்டைப் பார்த்தால், அது ரூ. 9,200 ஆக இருக்கும். அதாவது ஒவ்வொரு மாதமும் ஊழியரின் ஊதியத்தில் ரூ.720 சம்பள உயர்வு இருக்கும். ஆண்டு அடிப்படையில் பார்த்தால் இந்த உயர்வு ரூ. 99,360 ஆக இருக்கும். 


மேலும் ஒரு நல்ல செய்தி: 8வது ஊதியக் குழு


ஏழாவது ஊதியக் குழுவை ரத்து செய்து புதிய ஊதியக் கொள்கையை கொண்டு வர அரசு யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய முறையில் ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாது. அடுத்த ஆண்டு ஊழியர்களின் சம்பளம் 44% வரை அதிகரிக்கலாம் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 


ஃபிட்மென்ட் பேக்டரை அதிகரிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து அரசு ஒரு முடிவை எடுத்தால், அதன் பிறகு ஊழியர்களின் சம்பளம் மிகப்பெரிய அளவில் உயர வாய்ப்புள்ளது. தற்போது, ​​ஊழியர்களின் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 மடங்காக உள்ளது. அதன் அடிப்படையில் அடிப்படை சம்பளம் ரூ.18,000 வழங்கப்படுகிறது. ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 மடங்காக உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 8,000 அதிகரித்து, அவர்களின் மொத்த சம்பளம் ரூ. 26,000 ஆக உயரும். 


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி.... ஜூலையில் பம்பர் டிஏ உயர்வு உறுதி!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ