7வது சம்பள கமிஷன் டிஏ உயர்வு, சமீபத்திய புதுப்பிப்பு: நாட்டில் உள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அவர்களுக்கு மீண்டும் ஒரு பெரிய அறிவிப்பு வரப்போகின்றது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மீண்டும் அதிகரிப்பதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கிவிட்டன. அடுத்த மாதம் அதாவது ஜூலையில் மத்திய ஊழியர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி வழங்கப்படுகின்றது. பணவீக்கம் மற்றும் அதிகரிக்கும் விலைவாசியை ஈடுகட்ட இந்த அலவன்ஸ் அளிக்கப்படுகின்றது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்கள் முதல் திருத்தப்பட்ட அகவிலைப்படி அமலுக்கு வருகிறது. ஜனவரி 2023 -ல் ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட்டது. அதுவரை 38 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி ஜனவரி முதல் 42 சதவிகிதமாக உயர்ந்தது. தற்போது ஜூலை மாதத்தில் இது மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது வரை பெறப்பட்டுள்ள ஏஐசிபிஐ தரவுகளின் படி, ஜூலை முதல் அகவிலைப்படியில் 3-4 சதவிகித ஏற்றம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


ஏஐசிபிஐ குறியீட்டில் உயர்வு


மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் ஏஐசிபிஐ குறியீடு மீண்டும் ஒரு உயர்வை பதிவு செய்துள்ளது. இந்த குறியீடு ஜனவரியில் 132.8 புள்ளிகளாக இருந்தது. இது பிப்ரவரி மாதத்தில் 0.1 புள்ளிகள் குறைந்து 132.7 புள்ளிகள் ஆனது. மீண்டும் மார்ச் மாதத்தில், இந்த எண்ணிக்கை 0.6 புள்ளிகள் அதிகரித்து 133.3 புள்ளிகளை எட்டியது. அதேசமயம் ஏப்ரலில் ஏஐசிபிஐ புள்ளி 0.9 சதவீதம் அதிகரித்து தற்போது 134.2 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், மே மற்றும் ஜூன் மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் இன்னும் வரவில்லை. எனினும், தற்போதுள்ள போக்கைப் போல, இந்த இரண்டு மாதங்களின் ஏஐசிபிஐ எண்களிலும் அதிகரிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி நடந்தால், ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கும் என்பது நிச்சயம். 


மேலும் படிக்க | 8th Pay Commission அதிரடி அப்டேட்: ஊழியர்களின் அடிப்படை ஊதியம் ராக்கெட் வேகத்தில் உயரும்


ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும்


மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். எனினும், செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அரசு இதற்கான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் தரவு வந்துள்ளது. அடுத்து மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான புள்ளிவிவரங்கள் பெறப்படும். இதன் பின்னர்தான் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பை அரசாங்கம் வெளியிடும். ஆனால் ஜூலை 2023 முதல் அமல்படுத்தப்பட உள்ள அகவிலைப்படியின் சதவிகித அளவு தோராயமாக அறியப்பட்டுள்ளது. இம்முறை அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்படும் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.


அகவிலைப்ப்படி 46 சதவீதத்தை தாண்டும்


அகவிலைப்படி சூத்திரங்களில் அடிப்படையில், அகவிலைப்படி இம்முறை 4 சதவீதம் அதிகரிக்கப் போகிறது என்பது தெளிவாகிறது. விலைக் குறியீட்டு விகிதத்தில் இருக்கும் இயக்கத்தை வைத்து பார்த்தால், அகவிலைப்படி 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக அதிகரிப்பது உறுதி என்று தெரிகிறது. மே மாத இறுதியில் ஏப்ரல் மாதத்தின் ஏஐசிபிஐ எண்கள் வந்தன. இதனை அடுத்து ஏஐசிபிஐ இன்டெக்ஸ் 134.2 புள்ளிகளை எட்டியுள்ளது. இது தவிர, அகவிலைப்படி மதிப்பெண் 45.06 ஆக உள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் குறியீடு 46.40 -ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது டிஏவில் 4% அதிகரிப்பு நிச்சயம் என்ற நம்பிக்கை உள்ளது. 


மேலும் படிக்க | 7th Pay Commission: காத்திருக்கும் 3 நல்ல செய்திகள்.. மகிழ்ச்சியில் ஊழியர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ