அகவிலைப்படி, பயணப்படி, நிலுவைத் தொகை புதுப்பிப்பு செய்திகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த 6 மாதங்கள் மிகவும் சிறப்பாக இருக்கும். சமீபத்தில் ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து தற்போது அகவிலைப்படி 42 சதவிகிதமாக உள்ளது. ஜூலை 2023 இல், அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி இதனுடன் பயணப்படியும் அதிகரிக்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் இந்த வேளையில் ஊழியர்களின் பணி மதிப்பீடும் (அப்ரெய்சல்) செய்யப்படும் என எதிர்பார்ப்பு உள்ளது. ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி அக்டோபர் மாத சம்பளத்தில் வழங்கப்படும். அதனால் அவர்களுக்கு 3 மாத நிலுவைத் தொகையும் கிடைக்கும். இவற்றின் காரணமாக ஜூலை 2023க்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயரும் என்பது தெளிவாகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்னும் 6 மாதங்களில் ஒன்றன் பின் ஒன்றாக பல நல்ல செய்திகள் அவர்களுக்கு காத்திருக்கின்றன. 


அகவிலைப்படியுடன் மற்ற கொடுப்பனவுகளும் அதிகரிக்கும்


மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு மட்டும் அல்ல, இது தவிர மற்ற கொடுப்பனவுகளும் அதிகரிக்கும். பயண கொடுப்பனவு (டிராவல் அலவன்ஸ்) மற்றும் நகர கொடுப்பனவும் (சிடி அலவன்ஸ்) இதில் அடங்கும். அதே நேரத்தில், அகவிலைப்படி அதிகரிப்பின் காரணமாக, அவர்களின் ஓய்வூதியப் பலன்கள், வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடை போன்றவற்றில் பெரிய அதிகரிப்பு ஏற்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு பெருமளவிலான ஊதிய உயர்வு இருக்கும். 


மேலும் படிக்க | டபுள் ஜாக்பாட்... அகவிலைப்படி உடன் அகவிலை நிவாரணத்தை அதிகரித்த மாநில அரசு!


மத்திய பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்


மத்திய ஊழியர்களின் பல்வேறு நிலைகளிலும் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. மதிப்பீட்டு சாளரம் (அப்ரெய்சல் விண்டோ) ஜூன் வரை திறந்திருக்கும். இதற்குப் பிறகு, இது ஜூலை முதல் செயலாக்கப்படுகிறது. ஜூன் மாதத்திற்குள் சுயமதிப்பீட்டை பூர்த்தி செய்த பிறகு, அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தப்படும். இதற்குப் பிறகு, கோப்பு முன்னோக்கி நகரும். பதவி உயர்வு பெறும் ஊழியர்களின் சம்பளமும் பெருமளவில் உயரும். 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்கப்படும். 


3 மாத நிலுவைத் தொகை கிடைக்கும்


மத்திய அரசு ஊழியர்களின் அடுத்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 2023 முதல் அமலுக்கு வரும். வரும் நாட்களில், CPI-IW குறியீட்டின் எண்ணிக்கையிலிருந்து எவ்வளவு அகவிலைப்படி அதிகரிக்கப்பட வேண்டும் என்பது தெளிவாகும். ஜனவரி 2023 முதல் ஜூன் 2023 வரையிலான பணவீக்க புள்ளிவிவரங்கள் எவ்வளவு அகவிலைப்படி அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும். அதன் பிறகு இது குறித்த அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும். ஜூலை முதல் இந்த அறிவிப்பு பொறுந்தும் என்பதால், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாத நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்கப்படும். நிலுவைத் தொகை சேர்ந்து வரும் என்பதால், ஊழியர்களின் கணக்கில் பெரும் தொகை வரும்.


அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கலாம்


ஜனவரி 2023 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றி மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் 4 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது. இப்போது அடுத்த விலை உயர்வு ஜூலையில் இருக்கும். AICPI குறியீட்டின் எண்களால் தீர்மானிக்கப்படும் அகவிலைப்படிக்கான 2 மாத எண்கள் வந்துள்ளன. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் குறியீடு 44 சதவீதத்தை எட்டியுள்ளது. அதாவது 2 சதவீதம் கூடுதல் அகவிலைப்படி அதிகரித்துள்ளது. மீதமுள்ள மாதங்களுக்கான எண்கள் வந்தவுடன் அகவிலைப்படி எவ்வளவு உயரும் என்பது தெரிந்துவிடும்.


மேலும் படிக்க | 8th Pay Commission பம்பர் அப்டேட்: விரைவில் நல்ல செய்தி, ஊதிய உயர்வு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ