April Horoscope 2022: ஏப்ரல் மாதம் பல ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். ஏப்ரல் மாதத்தின் கடைசி நாட்களில் பல ராசிக்காரர்களுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். உங்களுக்கு என்ன விளைவு ஏற்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்- மேஷ ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 14க்கு பிறகு குடும்பத்தில் மதம் சார்ந்த அல்லது சுப காரியங்கள் நடைபெறும். ஏப்ரல் 15 முதல் செலவுகள் குறையலாம். குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். ஏப்ரல் 29 முதல் வருமானமும் அதிகரிக்கும்.


மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும் 


ரிஷபம்- ஏப்ரல் 15 முதல் தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். செலவுகள் கூடும். வாழ்க்கை குழப்பமாக இருக்கும். ஏப்ரல் 29 முதல் வேலை மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


மிதுனம்- ஏப்ரல் 14 முதல் பணத்தின் நிலை மேம்படும். வாகன வாங்கக்கூடும். ஏப்ரல் 29ம் தேதி பதவி உயர்வுக்கான வாய்ப்புகளையும் காணலாம்.


கடகம்- ஏப்ரல் 14 முதல் கல்விப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் மேம்படும், ஆனால் பேச்சு வார்த்தைகளில் பொறுமையாக இருங்கள். ஏப்ரல் 29க்கு பிறகு வெளியூர் பயணங்கள் அமையும்.


சிம்மம்- ஏப்ரல் 14க்கு பிறகு கல்விப் பணிகளில் கவனம் செலுத்தவும். இடையூறுகள் ஏற்படலாம். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். ஏப்ரல் 29 முதல் வேலைச்சுமை கூடும்.


கன்னி- ஏப்ரல் 14 முதல் கன்னி ராசிக்காரர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். கல்விப் பணி மேம்படும். வருமான நிலை மேம்படும். ஏப்ரல் 27க்குப் பிறகு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.


துலாம்- ஏப்ரல் 14 முதல் மனதில் குழப்பம் ஏற்படலாம். மன அமைதிக்காக பாடுபடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். ஏப்ரல் 27க்கு பிறகு வேலை மாறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.


விருச்சிகம் - ஏப்ரல் 14க்கு பிறகு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கல்விப் பணி மேம்படும். வருமானம் அதிகரிக்கும். ஏப்ரல் 27 முதல், கலை அல்லது இசைக்கான போக்கு அதிகரிக்கலாம். ஏப்ரல் 29 முதல் தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள்.


தனுசு- ஏப்ரல் 14 முதல் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கூடும். ஏப்ரல் 29க்கு பிறகு உத்யோகத்தில் வேலை வாய்ப்பு விரிவடையும்.


மகரம்- ஏப்ரல் 14 முதல், அறிவுசார் வேலைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கூடும். வருமானமும் அதிகரிக்கும். ஏப்ரல் 29க்கு பிறகு இடம் மாற வாய்ப்புகள் உண்டு.


கும்பம்- ஏப்ரல் 14 முதல் உத்யோகத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சமய நிகழ்ச்சிகள் நடைபெறும். பண வரவு உண்டாகும். ஏப்ரல் 29ல் நம்பிக்கை அதிகரிக்கும்.


மீனம்- ஏப்ரல் 14 முதல் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கல்விப் பணி மேம்படும். ஏப்ரல் 29க்கு பிறகு கல்வி பணிக்காக வெளியூர் பயணம் செல்லலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | பிப்ரவரி 19 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்சனை: 30 நாட்களுக்கு இக்கட்டான நிலை 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR