சீனாவின் சின்சுவா புரோவின்ஸ் (Sichuan province) எனப்படும் பகுதியில் பிறந்தவர் சென் லீ (Chen Li ). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 33 வயதான சென் லீ  கடந்த 20 ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறுநீர் கழிக்கும்போதெல்லாம் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார் சென் லீ. இவருக்கு இந்த பிரச்சனை அனைத்து நாட்களிலும் இல்லாமல் குறிப்பிட்ட இடைவேளிக்கு பின் மீண்டும் மீண்டும் 20 வருடங்களாக நிகழ்ந்துள்ளது.


இதனால் அடிவயிற்றில் வலியும் இருந்து வந்துள்ளது. சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர் பணப்பிரச்சனையால் தனது உடல்நிலை குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் இருந்துள்ளார்.


பின்னர் தொடர் வேதனையை அனுபவித்த அவர் அண்மையில் சிறுநீரக நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற்றார். ஆனால் அவருக்கு மாதத்தில் பாதி நாள் எந்த பிரச்சனையும் இல்லாமல் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் ரத்தப்போக்கால் பாதிப்படைவது மருத்துவருக்கும் புரியாத புதிராக இருந்துள்ளது. அதிலும் எந்த மருந்தும் உட்கொள்ளாமல் தானாகவே ரத்தப் போக்கு நின்றுள்ளது சற்று விநோதமாகவே இருந்துள்ளது.



மேலும் படிக்க | Monkeypox: இவைதான் குரங்கு அம்மையின் முக்கிய அறிகுறிகள்


பின்னர் அவருக்கு ஹார்மோன் சோதனை, குரோமோசோம் சோதனை என அனைத்து சோதனையும் செய்யப்பட்டது. அப்போது அவரது சோதனை முடிவுகள் கற்பனைக்கு அடங்காத வண்ணம் இருந்துள்ளது. 


அவரது உடலில் ஆண்களுக்கான டெஸ்டோஸ்ட்ரோன் ஆண்களுக்கு இருக்கவேண்டிய அளவிலும், பெண்களுக்கு இருக்கவேண்டிய ஈஸ்ரோஜன் பெண்களுக்கு இருக்கவேண்டிய அளவிலும் இருந்துள்ளது.


அதாவது ஒரு வளர்ந்த பெண்ணின் உடலில் இருக்கவேண்டிய ஹார்மோன்கள் அவரது உடலில் இருந்துள்ளது. பின்னர் நடத்தப்பட்ட ஸ்கேன் போன்ற சோதனையில் அவருக்கு பெண் பிறப்புறுப்பும் இருந்துள்ளது தெரியவந்தது. 


இதனால் தனது 13 வயதில் பருவத்தை அடைந்த அவருக்கு தொடர்ந்து 20 ஆண்டுகளாக மாதமாதம் மாதவிடாய் சுழற்சி நிகழ்ந்துள்ளது. ஆனால் இதனை அவர் சிறுநீரக பிரச்சனை என்று தவறாக புரிந்துக்கொண்டு இவ்வளவு நாட்களும் வாழ்ந்துள்ளார் என்பது தெரிய வநந்தது.



இதையடுத்து அவர் தனது மருத்துவரின் அறிவுரையின்படி தனக்கு இருக்கும் பிறப்புறுப்புகளில் ஏதேனும் ஒன்றை அகற்றிக்கொள்ள முடிவெடுத்தார். தன்னை ஆணாக உணர்ந்து வந்த அவர் பெண் உறுப்பை அகற்றிக்கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தை முன்வைத்தார். இதையடுத்து 3 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் இவருடைய கர்ப்பப்பையை அகற்றினர். இதையடுத்து அவர் தற்போது ரத்தப்போக்கு பிரச்சனையில் இருந்து முற்றிலுமாக வெளியே வந்துள்ளது அவருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.


இது குறித்து பேசிய மருத்துவர்கள், "அவருடைய கர்ப்பப்பை நல்ல நிலையில், முற்றிலும் வளர்ந்து இருந்தது. அவர் பெண்ணாக மாற நினைத்திருந்தாலும் அவரால் குழந்தை பெற்றிருக்க முடியும்" என்று தெரிவித்தனர்.


மேலும் படிக்க | Heart Health: கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க இந்த மசாலாவை தினமும் உணவில் சேர்க்கவும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR