டிஜிட்டல் உலகின் வரம்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் ஆன்லைன் மோசடி (Online Fraud) வழக்குகளும் விரைவான வேகத்தில் அதிகரித்து வருகின்றன. சில நேரங்களில் வங்கியின் பெயரிலும், சில சமயங்களில் KYC மற்றும் சில சமயங்களில் புதிய டெபிட் அல்லது கிரெடிட் கார்டு என்ற பெயரிலும், மக்களின் கணக்குகளில் உள்ள தொகை கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வகையான சேதத்தை தவிர்க்க வெண்டுமானால், அதற்கு எச்சரிக்கையாக இருப்பது மட்டுமே ஒரே வழியாகும். ஆனால் இப்போது இணைய மோசடியால் (Cyber Fraud) ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடுசெய்ய காப்பீட்டுத் துறை முன்வந்துள்ளது.


இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட் (Flipkart) மற்றும் தனியார் துறை பொது காப்பீட்டு நிறுவனமான பஜாஜ் ஆலியான்ஸ் (Bajaj Allianz) இணைந்து டிஜிட்டல் சுரக்ஷா குழும காப்பீட்டு சேவையை (Digital Suraksha Group Insurance) தொடங்க உள்ளனர்.


அதிகரித்து வரும் சைபர் தாக்குதல்கள், ஃபிஷிங், ஸ்பூஃபிங் மற்றும் சிம்-ஹாக்கிங் ஆகியவற்றால் ஏற்படும் இழப்புகளுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு குழு காப்பீடு ஈடுசெய்கிறது. குறைந்தது ஒரு வருடத்திற்கு இந்த காப்பீட்டை நீங்கள் தேர்வு செய்யலாம். டிஜிட்டல் பாதுகாப்பு குழு காப்பீட்டுக்கான பிரீமியம் ஆண்டுக்கு ரூ .183 முதல் ரூ .50,000 வரை உள்ளது.


சைபர் தாக்குதல்களின் (Cyber Attacks) ஆபத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாக பஜாஜ் ஆலியான்ஸ் பொது காப்பீட்டு எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தபன் சிங்கால் தெரிவித்தார். இது உங்கள் பணம், நற்பெயர் மற்றும் தனிப்பட்ட தகவல்களைக் குறித்த நுணுக்கமான ஒரு முக்கிய விஷயமாகும் என்றார் அவர்.


பிளிப்கார்ட்டின் தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டிஜிட்டல் பாதுகாப்பு குழு காப்பீட்டின் மூலம், நாளொன்றுக்கு 50 பைசா என்ற அளவை விட குறைவான தொகையில் நீங்கள் ஆன்லைன் மோசடி (Online Fraud) அபாயத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று அவர் கூறினார். இந்த காப்பீட்டை பிளிப்கார்ட்டிலிருந்து வாங்கலாம்.


ALSO READ: வங்கிக் கணக்கு மோசயால் இழந்த முழு பணமும் திருப்பித் தரப்படும்: RBI


இந்த காப்பீடு ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது அனைத்து வகையான இணைய அச்சுறுத்தல்களுக்கும் எதிராக பாதுகாப்பு அளிக்கும். மேலும் இது உங்கள் பதற்றத்தையும் குறைக்கும்.


ஃபிளிப்கார்ட் தலைவர் ரஞ்சித் போயபாலி, ஃபிளிப்கார்ட்டில் ஆன்லைன் ஷாப்பிங்கை பாதுகாப்பானதாகவும், வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்வதற்கு மிகவும் வசதியானதாகவும் மாற்றும் முயற்சியில் இது ஒரு புதிய சோதனை என்று கூறினார்.


பஜாஜ் ஆலியான்ஸ் உடன் இணைந்து இணைய காப்பீட்டை (Cyber Insurance) அறிமுகப்படுத்துவது இந்த திசையில் ஒரு மிகப்பெரிய படி என்று அவர் தெரிவித்தார். பண்டிகை காலம் நெருங்கி வருவதால், வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் ஷாப்பிங் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங்கில் எந்தவிதமான மன அழுத்தமும் அச்சமும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம் என்றார் அவர்.


ALSO READ: ஆன்லைன் பண மோசடி.. 32 லட்சம் பணத்தை இழந்த மும்பை தொழிலதிபர்..!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR