7வது ஊதியக் குழு, சமீபத்திய புதுப்பிப்பு: நாட்டில் உள்ள சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. விரைவில் அகவிலைப்படியில் 3 அல்லது 4 சதவீத உயர்வு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்துள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை மாதம் முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி மூன்று சதவீதம் உயர்த்தப்படும் என ஒரு சாரரும் 4 சதவீதம் உயர்த்தப்படும் என ஒரு சாராரும் தெரிவித்து வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எனினும் அரசாங்கம் இது குறித்து இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. கூடிய விரைவில் இது தொடர்பான அறிவிப்பை அரசாங்கம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நவராத்திரிக்கு முன்னர் இந்த அறிவிப்பு வெளியாகலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படியில் 3 அல்லது 4 சதவிகித அதிகரிப்பு ஏற்பட்டவுடன் ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கும்.


3% அகவிலைப்படி உயர்வு 


பிடிஐ அதிகாரிகள், “அகவிலைப்படி உயர்வு, மூன்று சதவீத புள்ளிகளுக்கு சற்று அதிகமாக இருக்கும். தசம புள்ளிக்கு மேல் டிஏ அதிகரிப்பதை அரசு கருத்தில் கொள்வதில்லை. இதனால், டிஏ மூன்று சதவீதம் அதிகரித்து 45 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது.” என கூறியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களின் டிஏ சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (சிபிஐ-ஐடபிள்யூ) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஜூலை மாத சிபிஐ தரவுகளின்படி, அரசாங்கம் டிஏவை 3 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும் என்று வட்டாரங்கள் கூறுகின்றன. அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும், இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போதைய அகவிலைப்படி எவ்வளவு 


ஜனவரி மாத கணக்கீட்டில், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அகவிலைப்படி வருடத்திற்கு இரண்டு முறை கணக்கிடப்படுகிறது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி மாற்றியமைக்கப்படுகின்றது. ஜனவரியை தொடர்ந்து ஜூலை 2023 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு பற்றி இன்னும் எந்த செய்தியும் வரவில்லை. இதனால் அகவிலைப்படி உயர்வுக்காக ஊழியர்கள் காத்திருக்கின்றனர். உயர்த்தப்பட்ட சம்பளம் ஜூலை மாதம் முதல் கணக்கிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | பான், ஆதார் இணைக்காத வங்கி கணக்குகளுக்கு இனி பணம் அனுப்ப முடியாது?


4 சதவீத அகவிலைப்படி உயர்வு 


ஜனவரி முதல் ஜூலை முதல் பெறப்பட்ட ஏஐசிபிஐ தரவுகளின் படி அகவிலைப்படி நிச்சயமாக 4% அதிகரிக்கப்படும் என சிலர் கருதுகிறார்கள். இது நடந்தால், அகவிலைப்படி 42ல் இருந்து 46 சதவீதமாக உயரும். இதன் காரணமாக, மத்திய ஊழியர்களின் சம்பளம் ஆண்டுக்கு ரூ.8,000 -இலிருந்து ரூ.27,000 ஆக உயரும்.


குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ 18,000 இல் டிஏ அதிகரிப்பு கணிதம்


ஊழியர்களின் அடிப்படை சம்பளம் - மாதம் 18,000 ரூபாய்


புதிய அகவிலைப்படி (46%) - மாதம் ரூ 8280
இதுவரையிலான அகவிலைப்படி (42%) - மாதம் ரூ. 7560
அகவிலைப்படியில் அதிகரிப்பு - 8280-7560 = ரூ. 720
ஆண்டு ஊதிய உயர்வு 720X12 = ரூ.8640


அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ 56,900 இல் டிஏ அதிகரிப்பு கணிதம்


ஊழியர்களின் அடிப்படை சம்பளம் = மாதம் ரூ 56,900


புதிய அகவிலைப்படி (46%) = மாதம் ரூ 26,174
இதுவரையிலான அகவிலைப்படி (42%) = மாதம் ரூ. 23,898 
அகவிலைப்படியில் அதிகரிப்பு - 26,174-23,898 = ரூ. 2,276 மாதத்திற்கு
ஆண்டு ஊதிய உயர்வு = 2276X12= ரூ. 27,312


மேலும் படிக்க | ஊழியர்களுக்கு அடிச்சது செம ஜாக்பாட் - நிதி அமைச்சகம் அறிவிப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ