மத்திய கிழக்கு இரயில்வே துறையில் மொத்தம் 2234 இடங்கள் காலியாக உள்ளது. அந்த இடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்க்கப் படுகின்றன என இரயில்வே துறை அறிவித்துள்ளது. ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கபட்டு உள்ளது. மேலும் இந்த பணியிடத்திற்கு முன் அனுபவம் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆன்-லைன் மூலமாக தான் விண்ணப்பிக்க வேண்டும். www.rrcecr.gov.in என்ற அரசு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதளத்தில் விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வு முறை குறித்து விளக்கப்பட்டு உள்ளது. கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி முதல் ஆன்-லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. விண்ணப்பம் இணைப்பு


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேலைக்கான விவரம்: 


பணியிடம் : கிழக்கு மத்திய இரயில்வே


நிர்வாகம் : மத்திய அரசு 


காலிப்பணியிடம் : 2234 


கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி மற்றும் ஐடிஐ தேர்ச்சி 


வயது வரம்பு : 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 


கடைசி தேதி : ஜனவரி 10, 2019.