புது தில்லி: வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து விஷயங்களிலும் தோல்வியே ஏற்படுகிறது என வருந்துகிறீர்களா அல்லது துரதிர்ஷ்டம் உங்களை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள சில எளிய பரிகாரங்களை பின்பற்றலாம். இதன் மூலம் பிரச்சனைகள் நீங்கும். ஜோதிடத்தின் சில எளிய பரிகாரங்கள் மூலம், உங்கள் துரதிர்ஷ்டத்தை நீங்கள் அதிர்ஷ்டமாக மாற்றலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குளிக்கும் போது  செய்ய வேண்டியவை


அதிர்ஷ்டம் உங்களை நீங்காமல் இருக்க, தினமும் காலையில் ஒரு சிட்டிகை மஞ்சளை தண்ணீரில் கலந்து குளிக்கவும். இதன் மூலம், விஷ்ணு பகவான் மற்றும் பிருஹஸ்பதி தேவைனின்  அருள் நீங்காமல் இருக்கும். இதன் காரணமாக உங்கள் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். மாலையில் குளிக்கும் போது, தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். இது அனைத்து எதிர்மறைகளையும் நீக்குகிறது.


ALSO READ | ஆஞ்சநேயருக்கு செவ்வாய்க்கிழமை ஏன் உகந்தது, விரதம் எப்படி இருக்க வேண்டும்
 


அனுமனை வணங்குதல்


உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து நிதி அல்லது பிற பிரச்சனைகள் இருந்தால், பஞ்சமுகி ஹனுமானை வழிடுதல் நல்ல பலனை கொடுக்கும். முடிந்தால், தினமும் அல்லது ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் அனுமான் கோயிலுக்குச் சென்று பஞ்சமுகி ஹனுமானின் முன் தீபம் ஏற்றி அனுமன் சாலிசாவை படித்தால், அனுமனின் அருளால் பணம், வேலை, எதிரிகள் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறலாம்.


துளசிக்கு முன்  தீபம் ஏற்றவும்


தினமும் துளசிக்கு அருகில் தீபம் ஏற்றி வழிபட்டால், அவர் தனது வாழ்வில் இருந்து அனைத்து வகையான எதிர்மறை சக்திகளிலிருந்தும்  காப்பாற்றப்படுவார் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் கூட, அதன் பலன்களைப் உணர்ந்து, இது  மிகவும் மங்களகரமான செயல் எனக் கருதுகின்றனர்.


சங்கு வழிபாடும் பலன் தரும்


உங்கள் வீட்டின் சில பகுதியில் வாஸ்து குறைபாடுகள் இருப்பதாக உணர்ந்தாலோ அல்லது கண்டாலோ, குறைபாடு அந்த இடத்தில் காலையிலும் மாலையிலும் சங்கு ஊத வேண்டும். வீட்டில் சங்கு இல்லாவிட்டால், அதற்குப் பதிலாக வணங்கிய பின் மணியையும் அடிக்கலாம். வளிமண்டலத்தின் எதிர்மறை ஆற்றல் மணி வெளியிடும் ஒலியால் அழிக்கப்படுகிறது.


நின்று போன கடிகாரம் வீட்டில் இருக்க கூடாது


வாஸ்து சாஸ்திரத்தில் இயங்காமல் நின்று போன கடிகாரம் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் கருதப்படுகிறது.  நின்று போன கடிகாரம் உங்கள் அதிர்ஷ்டத்தை நிறுத்துகிறது என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. உங்கள் வீட்டில் நின்று போன கடிகாரம் இருந்தால், அதை உடனடியாக சரிசெய்ய முயற்சிக்கவும் அல்லது வீட்டில் இருந்து அப்புறப்படுத்தவும். இது தவிர, காலணிகள்-செருப்புகள் அல்லது ஆடம்பரமான பொருட்களை படுக்கைக்கு அடியில் வைக்கக்கூடாது, ஏனெனில் அவ்வாறு செய்வதன் மூலம், அது லட்சுமி தேவி வரும் பாதையைத் தடுக்கப்படுகிறது என்று நம்பப்படுகிறது.


(குறிப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்கள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் அமைந்தவை)


ALSO READ | வடக்குத் திசையில் வைத்து குபேரனை வணங்கினால், செல்வ வளம் பெருகுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR