7வது ஊதியக் குழுவின் சமீபத்திய செய்தி: ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் காத்திருந்த தருணம் தற்போது வந்துள்ளது. ஆம், ஜூலை 1 ஆம் தேதி முதல் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஏ எவ்வளவு உயரும் என்பது தெரிய வந்துள்ளது. ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஜூன் 2023 -க்கான ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவை தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூன் மாதத்தில் 1.7 புள்ளிகள் அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டது


ஜனவரி முதல் ஜூலை வரையிலான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், டிஏ உயர்வு 46 சதவீதம் என்ற விகிதத்தில் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவீதமாக இருந்தது, இனி இது 46 சதவீதமாக உயரும். ஜூன் 2023 இன் ஏஐசிபிஐ குறியீட்டில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஜூன் குறியீட்டு எண் 136.4 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. முன்னதாக மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 134.7 புள்ளிகளாக இருந்தது. அதாவது ஜூன் மாதத்தில் 1.7 புள்ளிகள் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. மே மாத புள்ளிவிவரங்களின்படி, டிஏ மதிப்பெண் 45.58 சதவீதமாக இருந்தது, இது ஜூன் 2023 இல் 46.24 சதவீதமாக அதிகரித்துள்ளது.


டிஏ 46 சதவீதம் என்ற விகிதத்தில் கிடைக்கும்


இந்த எண்ணிக்கை வந்த பிறகு, மத்திய அரசு ஊழியர்களுக்கு 46 சதவீதம் அகவிலைப்படி அறிவிக்கப்படும் என்பது தெளிவாகிறது. செப்டம்பர் மாதத்தில் புதிய அகவிலைப்படியை அரசாங்கம் அறிவிக்கலாம். புதிய அகவிலைப்படி செப்டம்பர் மாத சம்பளத்திலேயே வழங்கப்படும். இருப்பினும், இதனுடன், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மூன்று மாத நிலுவைத் தொகையும் வழங்கப்படும். அகவிலைப்படியின் புதிய விகிதங்கள் அமல்படுத்தப்படும் வரை, ஊழியர்களுக்கு 42 சதவிகித அகவிலைப்படியே வழங்கப்படும்.


மேலும் படிக்க | இப்படியான 5 ரூபாய் உங்ககிட்ட இருக்கா? உடனே படியுங்க.. லட்சங்களை அள்ளித்தரும்


ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவார்கள்


அகவிலைப்படி உயர்வின் பலன், ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் சம்பளம் பெறும் மத்திய ஊழியர்களுக்கு வழங்கப்படும். இந்த உயர்வின் பலன் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நேரடியாக வழங்கப்படும். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படுகிறது. இது ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 முதல் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு அரசின் நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.


ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் காத்திருந்தனர்


தொழில்துறை பணவீக்க புள்ளிவிவரங்களின் (ஏஐசிபிஐ) அடிப்படையில் அகவிலைப்படி தொகை தொழிலாளர் அமைச்சகத்தால் தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் போலவே இந்த முறையும் அகவிலைப்படி உயர்வுக்காக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றனர். ஜூலை 2023 க்கும் அரசாங்கத்தால் 4 சதவீத உயர்வு அறிவிக்கப்பட்டால், ஜூலை 2021 முதல், மொத்தமாக டிஏ 15 சதவீதம் அதிகரிக்கும். ஜூலை 2021ல், கொரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த அகவிலைப்படி, ஒரே நேரத்தில் 17 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.


50 சதவிகித அகவிலைப்படி


இம்முறை, அதாவது ஜூலை 2023 முதல் அகவிலைப்படி 46 சதவிகிதமாக உயர்த்தப்படும். அதன் பிறகு, 2024 ஜனவரியிலும் அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரித்தால் மொத்த அகவிலைப்படை 50 சதவீதத்தை எட்டும். விதிகளின்படி, அகவிலைப்படி 50 சதவிகிதத்தை எட்டிய பின்னர் அது பூஜ்ஜியமாக மாற்றப்பட்டு, அடிப்படை சம்பளத்துடன் டிஏ தொகை சேர்க்கப்படும்.


சமீபத்தில், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்கள் தங்கள் ஊழியர்களுக்கு டிஏவை உயர்த்தின. மத்தியப் பிரதேச அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியுள்ளது. 


மேலும் படிக்க | இரண்டு வங்கிகளில் கணக்கு உள்ளதா? இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ