DA Hike: பணியாளர்களுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மூலம், ஊழியர்களின் சம்பளம் மீண்டும் ஒரு பெரிய உயர்வைக் காணும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகவிலைப்படியில் 4% அதிகரிப்பு


மோசமான நிதி நிலைமை இருந்தபோதிலும், உத்திரபிரதேச மின் கழகம் ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மத்திய ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி 42 சதவீதம் மின்சார ஊழியர்களுக்கும் வழங்கப்படும். இதுவரை மின்வாரிய ஊழியர்களுக்கு 38 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அவர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.


யார் யாருக்கு பலன்?


இத்தகவலை உத்தரப் பிரதேச பவர் கார்ப்பரேஷன் தலைவர் எம்.தேவ்ராஜ் நேற்று முன்தினம் (ஜூன் 12) தெரிவித்தார். உத்தரபிரதேச பவர் கார்ப்பரேஷன், மாநில மின் உற்பத்தி கழகம், டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன், ஜல் வித்யுத் நிகம் ஆகியவற்றின் அனைத்து விநியோக நிறுவனங்களின் ஊழியர்களும் அகவிலைப்படி உயர்வின் பலனை பெறுவார்கள்.


மேலும் படிக்க | 8th Pay Commission விரைவில்: சுடச்சுட சூப்பர் செய்தி...ஊழியர்களுக்கு பம்பர் ஊதிய உயர்வு


இந்த நிறுவனங்கள் அனைத்தையும் சேர்த்து சுமார் 37 ஆயிரம் நிரந்தர ஊழியர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படி உயர்வின் பலன் இவர்களுக்கு சென்றடையும். ஜனவரி முதல் மே மாதம் வரையிலான நிலுவைத் தொகை ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் செலுத்தப்படும். மறுபுறம், ஜூலையில் கிடைக்கும் ஜூன் மாத சம்பளம், டிஏ உயர்வு பலன் ஆகியவை அவர்களுக்கு ரொக்கமாக கிடைக்கும்.


நீண்ட நாள் காத்திருப்பு


உத்தரபிரதேச அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு மே மாதத்தில் காணப்பட்டது. இருப்பினும், அகவிலைப்படி உயர்வுக்காக ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். 


மத்திய அரசின் மார்ச் மாத உயர்வு அறிவிப்புக்குப் பிறகு, ஏப்ரல் மாதத்தில், உத்தரபிரதேச அரசு தனது ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கக்கூடும் என்று நம்பப்பட்டது. இருப்பினும், மே மாதத்தில் தான் ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டது. மேலும் நிலுவைத் தொகையை இபிஎஃப்-ல் செலுத்த வேண்டும்.


அகவிலைப்படி விதி என்னவெனில், 2016ஆம் ஆண்டு ஏழாவது ஊதியக்குழுவை அரசு அமல்படுத்தியபோது, ​​அப்போது அகவிலைப்படி பூஜ்ஜியமாக்கப்பட்டது. மேலும், அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியவுடன், அது பூஜ்ஜியமாகக் குறைக்கப்படும் என்பதி விதியாக உள்ளது. மேலும் 50 சதவீதத்தின்படி, ஊழியர்களுக்கு உதவித்தொகையாகப் பெறும் பணம் அடிப்படை சம்பளத்துடன் அதாவது குறைந்தபட்ச சம்பளத்துடன் சேர்க்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.


ஏழாவது ஊதியக் குழுவை ரத்து செய்து புதிய ஊதியக் கொள்கையை கொண்டு வர அரசு யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய முறையில் ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாது. அடுத்த ஆண்டு ஊழியர்களின் சம்பளம் 44% வரை அதிகரிக்கலாம் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 


ஃபிட்மென்ட் பேக்டரை அதிகரிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து அரசு ஒரு முடிவை எடுத்தால், அதன் பிறகு ஊழியர்களின் சம்பளம் மிகப்பெரிய அளவில் உயர வாய்ப்புள்ளது.


மேலும் படிக்க | இந்திய ரயில்வேயின் மிக நீண்ண்ண்ட ரயில்... பெட்டிகளை எண்ணியே டயர்டாயிடும்...!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ