தனது முன்னாள் காதலியின் மகள் என்பதை அறியாமல் வீட்டிற்கு பெண் பார்க்க சென்ற இளைஞர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய இளைஞர்களின் ஹீரோவாக திகழ்வது இணையதளம். நமது முன்னோர்கள் காலத்தில் ஒருவன் வாழ உணவு, உடை, இருப்பிடம் முக்கிய தேவையாக இருந்தது. ஆனால், தற்போதைய இளைஞர்கல் உயிர்வாழ உணவு, உடை, இருப்புடன் தேவைஇல்லை வெறும் இணையதளம் மட்டும் இருந்தால் போதும். ஏனென்றால், இந்த பறந்து விரிந்த உலகமே நமது கைக்குள் அடங்கிவிடுகிறது. இதற்க்கு சவாலாக பலவகையான செயலிகளும் வந்துவிட்டது. அதிலும் குறிப்பாக, ஆன்லைன் டேட்டிங்கிங்கிற்கு அதிகமான செயலிகள் வந்துவிட்டது. தற்போதைய இளைஞர்களிடம் டேட்டிங் செயலி இல்லை என்றால் நாம் ஆச்சரியப்படும் அளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இதுபோன்ற டேட்டங் செயலியில் நடந்த ஒரு சுவரஸ்யமான விஷயம் வெளியாகியுள்ளது. 


சுமார், 21 வயதுடைய இளைஞர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு பப் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு சுமார் 40 வயதுடைய பெண் ஒருவர் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், இருவரும் பேசி நட்பாகி ஒருவருக்கொருவர் தொலைபேசி எண்ணை பகிர்ந்துள்ளனர். இதையடுத்து, நீண்டநாட்களாக இவர்கள் இருவரும் தொடர்பில் இருந்துள்ளனர். அப்போது ஒருநாள் இருவரும் இணைந்து வெளியில் சென்றுள்ளனர். இதையடுத்து, அவர்கள் வீடு திரும்பும்போது இருவரும் தனிமையில் அந்த பெண்ணின் வீட்டில் தங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையடுத்து இருவரும் ஒன் நைட் ஸ்டாண்டில் ஈடுபட்டுள்ளனர். 



பின்னர் சில நாட்களில் இருவருக்குமான உறவு முறிந்துள்ளது. ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாமல் சென்று விட்டனர். அதன் பின்பு அந்த இளைஞர் டின்டர் செயலியில் 19 வயதுடைய பெண்ணிடம் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து, அவர்கள் இருவரும் டேட்டிங் செய்தனர். எல்லாம் சரியாக நடப்பதாக  உணர்ந்த  அந்த பெண் தனது ஆண் நண்பரை வீட்டில் உள்ளவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க விரும்பியுள்ளார். இதையடுத்து, அவரும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.


அந்த பெண் கொடுத்த அட்ரஸிற்கு சென்றபோது தான் தெரிந்தது தான் இந்த இடத்திற்கு ஏற்கனவே வந்திருக்கிறோம் என்று எனினும் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு இவர்கள் புதிதாக இங்கு குடிவந்திருக்கலாம். நாம் நினைப்பது போல் நடக்க வாய்ப்பில்லை என நினைத்துக்கொண்டே உள்ளே நுழையும் போது தான் தெரிந்தது,  அவர் ஏற்கனவே ஒன் நைட் ஸ்டாண்டில் ஈடுபட்ட பெண்ணும் அங்கு தான் இருந்தார். அந்த பெண் தான் தனது புது காதலியின் தாய் என தெரிவந்துள்ளது. 



இருவரும் ஒருவருக்கு ஒருவர் முகத்தில் பார்க்க முடியாமல் தவித்தனர். பின்னர் அந்த ஆண் அந்த வீட்டில் இருந்து எப்படியோ வெளியே வந்துவிட்டு பின்னர் அந்த 19 வயது பெண்ணிடமும் பொய்யான காரணங்களை சொல்லி பிரேக்கப் செய்துள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார். தற்போது இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.