சுக்கிரன் ராசி மாற்றம் ஏப்ரல் 2022: ஜோதிடத்தில், சுக்கிரன் மகிழ்ச்சி, காதல், அன்பு, பாசம், ஆடம்பரம் ஆகியவற்றின் காரணியகாக் கருதப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் சுப ஸ்தானத்தில் இருந்தால், அந்த நபர் ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார். அவரது வாழ்க்கையில் காதல் மற்றும் அன்புக்கு பஞ்சமிருக்காது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுக்கிரனின் ஆதிக்கம் அதிகமாக உள்ளவர்கள் செல்வச் செழிப்பு கொண்டவர்களாகவும், கவர்ச்சிகரமான ஆளுமைக்கு சொந்தக்காரர்களாகவும் இருப்பார்கள். நாளை அதாவது ஏப்ரல் 27ஆம் தேதி சுக்கிரன் கிரகம் ராசியை மாற்றுகிறது. சுக்கிரன் நாளை குருவின் ராசியான மீனத்தில் பிரவேசிக்கும். சுக்கிரனின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகள் மீதும் இருக்கும். இருப்பினும் குறிபிட்ட 3 ராசிகளுக்கு மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும். 


சுக்கிரனின் ராசி மாற்றத்தால் சுக்கிர தசை அடிக்கவுள்ள அதிர்ஷ்டக்கார ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலம். 


ரிஷபம்: 
சுக்கிரனின் ராசி மாற்றம் ரிஷப ராசிக்காரர்களுக்கு வருமானத்தை அபரிமிதமாக அதிகரிக்கும். பல வழிகளிலும் பணம் சம்பாதிப்பார்கள். நீண்ட நாட்களாக பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்ற காத்திருப்பு இவர்களுக்கு இருந்தது. அது இப்போது நடக்கும்.


தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வசதிகள் பெருகும். இந்த நேரம் வியாபாரிகளுக்கு பெரிய லாபத்தை தரும். குறிப்பாக வெளிநாட்டிலிருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும். ரிஷப ராசிக்காரர்கள் புதிய வேலையைத் தொடங்க விரும்பினால், அதற்கான சரியான நேரமாக இது இருக்கும். இந்த நேரம் அனைத்து விஷயங்களிலும் சிறப்பான பலன்களைத் தரும்.


மேலும் படிக்க | சனி பெயர்ச்சி, 3 நாட்களில் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி தலைகீழாக மாறும் 


மிதுனம்: 


சுக்கிரனின் ராசி மாற்றம் மிதுன ராசியினருக்கு புதிய வேலை வாய்ப்பை அளிக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கான முழு வாய்ப்புகளும் உள்ளன. வேலை செய்யும் இடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். பணம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. மொத்தத்தில் இந்த நேரம் எல்லாவிதமான பலன்களையும் தரும்.


குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன் / மனைவி குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். 


கடகம்: சுக்கிரனின் சஞ்சாரம் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். இதுவரை முடங்கிக் கிடந்த பணிகளும் தொடங்கும். தொழில் சாதகமாக முடியும். 


நீண்ட நாட்களாக வெளிநாடு செல்ல வேண்டும் என உங்களுக்கு இருந்த கனவு நிறைவேறும். வணிகர்கள் பெரிய ஆர்டர்களைப் பெறக்கூடும். இந்த நேரத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் பெரிய பலனைத் தரும். ஆடம்பர வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இந்த 3 ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR