புதன் பெயர்ச்சி: அடுத்த 68 நாட்களுக்கு இந்த ராசிகளின் காட்டில் பண மழை

Mercury Transit 2022: இன்று புதன் கிரகம் ரிஷப ராசியில் சஞ்சரித்துள்ள நிலையில், அந்த ராசியில் 68 நாட்கள் வக்கிர நிலையில் புதன் இருக்கும். இது 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களை கொடுப்பதாக இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 25, 2022, 11:19 AM IST
புதன் பெயர்ச்சி: அடுத்த 68 நாட்களுக்கு இந்த ராசிகளின் காட்டில் பண மழை title=

புதன் பெயர்ச்சி 2022: புதன் கிரகம் ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளது. இன்று அதாவது ஏப்ரல் 25ஆம் தேதி புதனின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானது. புதன் மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசியில் பிரவேசித்துள்ளார்.

அந்த ராசியில் 68 நாட்கள் வக்கிர நிலையில் புதன் இருக்கும். இது 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களை கொடுப்பதாக இருக்கும். பொதுவாக 21 நாட்களில் புதன் பெயர்ச்சி ஆவார். ஆனால் இந்த முறை அதே ராசியில் அதாவது ரிஷப ராசியில் 68 நாட்கள் இருக்கிறார். 

ஒருவருக்கு பகுத்தறிவு, கல்வி, எழுத்து, பேச்சாற்றல், புத்திசாலித்தனத்தைத் தரக்கூடியதும், சிறப்பான சிந்தனையால் தன் தொழில், வணிகத்தில் வெற்றியை பெற உறுதுணையாக இருக்கும் கிரகம் புதன் பகவான். புதனின் இந்த ராசி மாற்றம் பல ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமான நாளாக அமையும்.

ஜோதிட சாஸ்திரப்படி ரிஷப ராசியில் புதன் நுழைவது 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். புதன் இவர்களுக்கு பணம், தொழில், படிப்பு போன்றவற்றில் பல நன்மைகளை அள்ளித் தருவார்.

மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி 2022: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷம் - புதனின் மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு மிகுந்த நிம்மதியைத் தரும். அவர்களின் பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும். வருமான உயர்வால் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வேலை மேம்படும். மாணவர்கள் படிப்பில் சிறப்பாகச் செயல்படுவார்கள்.

ரிஷபம் - ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி காலத்தில் புதிய வேலை கிடைக்கும். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும். வியாபாரிகளும் அதிக லாபம் அடைவார்கள். வீட்டிலும் மகிழ்ச்சி நிலவும். மொத்தத்தில், இந்த நேரம் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொண்டு சேர்க்கும் காலமாக இருக்கும்.

மிதுனம் - புதன் சஞ்சாரம் மிதுன ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியைத் தரும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். வீடு வாகனம் வாங்கலாம். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம் - ரிஷப ராசியில் புதன் நுழைவதால் துலாம் ராசிக்காரர்களின் பழைய பிரச்சனைகள் நீங்கும். அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் முன்னேற்றம் இருக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். நிறுத்தப்பட்ட வேலைகள் எளிதாக முடிவடையும். வீடு வாகனம் வாங்கலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | ஏழரை சனியிலும் சனிபகவானின் அருளை பெற ‘இவற்றை’ செய்யுங்கள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News