மஹாசிவராத்திரி 2023: இன்று சிவபெருமானின் வழிபாட்டில் மிக முக்கியமான நாளான மகாசிவராத்திரி நாள் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில் பார்வதி அன்னை மற்றும் சிவபெருமானின் திருமணம் நடந்ததாக ஐதீகம். பார்வதி தேவி, சிவபெருமானைக் கணவனாகக் கருதி, அவரை அடைவதற்கு கடும் தவம் செய்தார். அவருடைய தவத்தாலும் வழிபாட்டாலும் மகிழ்ந்த சிவபெருமான் அவரைத் தன் மனைவியாக ஏற்றுக்கொண்டார். சிவபெருமான் உலகின் ஆதாரமாக பார்க்கப்படுகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையை வேண்டி ஒவ்வொரு ஆண்டும் பெண்கள் மஹாசிவராத்திரி அன்று விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். திருமணமாகாத ஆண்களும் பெண்களும் இந்நாளில் விரதம் இருப்பார்கள். மகாசிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து, நீராடி சிவபெருமானின் ஸ்தோத்திரங்களை சொல்ல வேண்டும். சிவன் கோயில் சென்று சிவபெருமானை தரிசிப்பது விசேஷம். 


மஹாசிவராத்திரி நாளில் இரவு கண் விழித்து ஐயனின் நாமங்களை துதித்து அவர் நினைவுடன் இரவை கழித்தால், அந்த நபர் வாழ்வில் அனைத்து வித சுக போகங்களையும் பெறுவார். 


இந்த அற்புதமான திருநாளில் சிவபெருமானின் அருள் நமக்கு மட்டுமல்ல, நம் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும், உலக மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணமே நமக்கு இருக்கும். இந்த நாளில் நம் அன்புக்குரியவர்களுக்கு அனுப்ப அருள் தரும் சில வாழ்த்துக்களை இங்கே காணலாம்.


‘சிவசிவ என்றிட தீவினை யாவும் தீரும். அனைவருக்கும் மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்!!’


சிவபெருமான் உங்களுக்கு மிகுந்த நல்வாழ்வு, மகிழ்ச்சி மற்றும் வெற்றியை வழங்குவார். ஓம் நம சிவாய!!;


மேலும் படிக்க | மகா சிவராத்திரி ராசிபலன்... மேஷம் முதல் மீனம் வரை! 


‘சிவபெருமான் உங்கள் வாழ்வில் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவார். மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்”


‘வளம், நலம், மகிழ்ச்சி சூழ்ந்து வாழ மஹா சிவராத்திரி வாழ்த்துக்கள்’


‘சிவபெருமான் தன்னுடைய தெய்வீக ஆசீர்வாதங்களை நமக்குள் நிரப்பி, உண்மை, தூய்மை மற்றும் தெய்வீகத்தன்மையுடன் முன்னேற ஒற்றுமையை அளிக்கிறார். அனைவருக்கும் மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்!!’


‘இல்லக விளக்கது இருள் கெடுப்பது!
சொல்லக விளக்கது சோதி உள்ளது !
பல்லக விளக்கது பலரும் காண்பது !
நல்லக விளக்கது நமச்சிவாயவே..!
மஹா சிவராத்திரி வாழ்த்துக்கள்!!’


‘நமச்சிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும்
என் நெஞ்சில் நீங்காதான்
தாள் வாழ்க..!’


‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
நல்லன செய்வோம், நலம் பெறுவோம்
இனிய மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள்..!’


மேலும் படிக்க | மஹாசிவராத்திரி: மன விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற ராசிக்கு ஏற்ற ‘அபிஷேகங்கள்’! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ