அடல் பென்ஷன் யோஜனா: தொழிலதிபர்கள் முதல் வேலை தேடுபவர்கள் வரை, ஓய்வுக்குப் பிறகும் தங்கள் வருமானத்தைத் தொடர சேமிக்கிறார்கள். சேமிப்பிற்காக, பலர் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்கிறார்கள், பலர் பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள். உங்கள் சேமிப்பின் மீதான வருமானத்தைப் பெற இன்று பல முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேமிப்பை அதிகரிக்க மத்திய அரசு அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana) திட்டத்தையும் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தில், முதலீட்டாளர் முதிர்வுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியத்தின் பலனைப் பெறுகிறார். அடல் பென்ஷன் யோஜனா 2015 ஆம் ஆண்டு இந்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம் அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக அமைப்புசாரா துறைகளில் பணிபுரிபவர்களுக்கு முதியோருக்கு பாதுகாப்பான வருமானம் வழங்குவதாகும். இப்போது அடல் பென்ஷன் திட்டத்தின் பலன்களைப் பெற எப்படி விண்ணப்பிப்பது என்பதை தெரிந்துக்கொள்வோம்.


அடல் பென்ஷன் திட்டத்தின் பலன்களைப் பெற எப்படி விண்ணப்பிப்பது?
* அடல் பென்ஷன் யோஜனா படிவங்கள் ஆன்லைனிலும் வங்கிகளிலும் கிடைக்கின்றன.
* ‘அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் இந்தத் திட்டத்தின் பலனைத் தருகின்றன. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
* தற்போதைக்கு, ​​அடல் பென்ஷன் திட்டத்திற்கு (Atal Pension Yojana) ஆன்லைனில் விண்ணப்பிக்க எந்த ஏற்பாடும் இல்லை. நீங்கள் உங்கள் வங்கிக்குச் சென்று மட்டுமே படிவத்தை நிரப்ப வேண்டும்.
* விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் வங்கியில் சமர்ப்பிக்கவும்.
* உங்கள் ஆதார் அட்டையின் புகைப்பட நகலை சமர்ப்பிக்கவும்.
* உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால் உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள்.


மேலும் படிக்க | Indian Railways: இந்திய ரயில்வேயின் புதிய விதி.. RAC டிக்கெட் உள்ளவர்கள் கட்டாயம் படிக்கவும்


அடல் பென்ஷன் திட்டத்தின் நன்மைகள் என்ன?
தேசிய ஓய்வூதிய அமைப்பின் (NPS - National Pension Scheme) ஒட்டுமொத்த நிர்வாக மற்றும் நிறுவன கட்டமைப்பின் கீழ் APY ஓய்வூதிய (Pension) நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA - Pension Fund Regulatory and Development Authority) நிர்வகிக்கப்படுகிறது.


ஓய்வூதிய நன்மைகள்:
வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பங்களிப்பைப் பொறுத்து 60 வயது முதல் ஒவ்வொரு மாதம் ரூ 1000 முதல் ரூ 5000 வரை குறைந்தபட்ச உத்தரவாத ஓய்வூதியம் வழங்கப்படும், இது அடல் பென்ஷன் திட்டத்தில் (APY) சேரும் வயதைப் பொறுத்து மாறுபடும்.


மரண நன்மைகள்:
சந்தாதாரரின் மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவிக்கு சமமான ஓய்வூதியம் வழங்கப்படும் மற்றும் சந்தாதாரர் மற்றும் மனைவி இருவரும் இறந்தவுடன், சந்தாதாரரின் 60 வயது வரை திரட்டப்பட்ட ஓய்வூதியத் தொகை நாமினிக்கு திருப்பித் தரப்படும்.


APYக்கான வயது வரம்பு:
18 முதல் 40 வயது வரை உள்ள எந்த இந்திய குடிமகனும் அடல் பென்ஷன் யோஜனாவில் (Atal Pension Yojana) சேரலாம். குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினரால் பங்களிப்பு செய்யப்பட வேண்டும். சந்தாதாரர் 60 வயதை அடைந்த பிறகு ஓய்வூதியம் வழங்கப்படும்.


APYக்கான தகுதி என்ன?
* இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
* வயது வரம்பு 18 முதல் 40 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* குறைந்தது 20 ஆண்டுகள் பங்களிக்க வேண்டும்.
* ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு இருக்க வேண்டும்.
* செல்லுபடியாகும் மொபைல் எண்.


மேலும் படிக்க | WFH: வீட்டில் இருந்து வேலை பார்ப்பவரா நீங்கள்? இந்த செய்தி உங்களுக்குத்தான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ