Communication Tips Tamil : நீங்கள் நினைக்கும் விஷயத்தை பிறருக்கு தெளிவாக புரிய வைக்க, அவர்கள் கூற வரும் கருத்தை தெளிவாக கேட்க, முக்கிய காரணமாக விளங்குவது பேச்சுத்திறமையாகும். இந்த திறமை, அது தொடர்பான தொழிலில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே உதவும். நீங்கள், உங்களது பேச்சுத்திறமையை வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேட்கும் திறன்: 


உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களிடம் என்ன பேசுகிறார்கள் என்பதை நீங்கள் கவனத்துடன் கேட்பது மிகவும் அவசியம் ஆகும். அப்போதுதான், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்களால் சரியான பதிலை கொடுக்க முடியும். பிறரிடம் பேசுகையில் தலை அசைப்பது, கண்ணோடு கண் பார்ப்பது, அவர்கள் ஏதாவது கேள்வி கேட்டால் அதற்கு பதில் கருத்து கூறுதல் போன்றவற்றை செய்ய வேண்டும்.


தெளிவான-சுருக்கமான பேச்சு:


நீங்கள் சொல்ல விரும்பும் கருத்துகளை தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் நிலைமையை, ஏன் இதை சொல்ல வருகிறீர்கள் என்பதையெல்லாம் கூற வேண்டும். இப்படி எதையும் தெளிவாக சுருங்கச்சொல்லி பழகுவது, எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் தடுக்கும். 


உடல் மொழி: 


நீங்கள் வாய் திறக்காமல் உடல் மூலம் பேசும் மொழியும் கூட, நிறைய கருத்துகளையும் பதில்களையும் கூறும். எனவே, யாருடன் பேசும் போதும் கூன் போடாமல், நேராக தலையை நிமிர்த்தி கண்ணோடு கண் பார்த்து பேசவும். நீங்கள் சொல்லும் கருத்துகளுக்கு ஏற்ப, கைகளை அசைத்தும் பேசலாம். 


புரிந்துணர்வு திறன்: 


உங்களுக்கு தொடர்பான ஒரு விஷயத்தை, வேறு ஒரு மூன்றாம் நபரின் கோணத்தில் அல்லது கண்ணோட்டத்தில் இருந்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இதனால் உங்களால் பிறரின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிவதுடன் சரியான விஷயங்களை பேசவும் முடியும். 


கேள்வி கேட்கும் திறன்: 


பிறர் பேசும் போது, உங்களுக்கு அவர்கள் பேசுவது புரியவில்லை என்றால், உடனே மரியாதைக்குரிய வகையில் கேள்வி கேட்பதில் தவறில்லை. இப்படி கேள்வி கேட்பதால், நீங்கள் சரியாக இதை கவனிக்கிறீர்கள் என்பது அவர்களுக்கு தெரியும்.


தினசரி பயிற்சி: 


அனைத்து திறன்களையும் போல, பேச்சு திறமையும் தினசரி பயிற்சி பெற்றால் மட்டுமே வளரும். எனவே, தினமும் நீங்கள் பிறரிடம் பேசுகையில், இந்த திறனை பயிற்சி செய்யவும். பொதுவெளியில் பேசுதல், இது போன்ற திறன்களை வளர்த்துக்கொள்ளும் நபர்களுடன் கலந்துரையாடுதல் போன்றவற்றை செய்யலாம். இதற்கான சில செயலிகளும் இருக்கின்றன. இவற்றில் உங்களின் நேரத்தை செலவழித்து பல விஷயங்களை கற்றுக்கொண்டு கைதேரலாம். 


மேலும் படிக்க | குழந்தையின் அறிவுத் திறன் பெருக.... உணவில் சேர்க்க வேண்டியவை!


கருத்துகளுக்கு செவி சாய்ப்பது;


உங்கள் பேச்சு குறித்து பிறர் என்ன கருத்து கூறுகிறார்கள், எதை மாற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள் என்பது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர், அதை எடுத்துக்கொண்டு அவற்றை சரிசெய்து கொள்ள வேண்டும். 


படித்தல் மற்றும் எழுதுதல் திறன்: 


உங்ளது பேச்சுத்திறமையை வளர்த்துக்கொள்ள பேசிக்கொண்டே இருந்தால் மட்டும் போதாது. அதற்கு எழுதுதல் திறனும் வேண்டும், நன்கு படிக்கும் திறனும் வேண்டும். இவை இரண்டுமே உங்களிடம் இருக்கும் திறமையை பல வருடங்கள் நிலைத்து நிற்க உதவும். இது, உங்களது உணர்ச்சிகள் மற்றும் திறன்களை சரிசெய்து, சீரமைத்து தெளிவாக யோசித்து பேச உதவும். 


மேலும் படிக்க | மூளையின் ஆற்றலை மேம்படுத்த... நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ