வருமான வரி கணக்கை ஜூலை 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என வருமானவரித்துறை எச்சரிக்கை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடப்பு ஆண்டு 2017-18 ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என வருமானவரித்துறை உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தவில்லை என்றால் ரூ.5 லட்சம் வருமானத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.


வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் ஜூலை 31ம் தேதிக்கு மேல் செலுத்த நேரிட்டால் அவர்களுக்கு ரூ.5,000 அபராதம் என்றும், டிசம்பர் 31க்குள் மேல் செலுத்தினால் ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமானவரி கணக்கை வருமானவரித்துறை அலுவலகத்திலும் நேரில் சென்று செலுத்தலாம்.