பண பரிவர்த்தனை தொடர்பான விதிகள்:  இப்போது டிஜிட்டல்  முறையில் பணம் செலுத்தும் சகாப்தம் என்றாலும், இன்றும் பலர் பண பரிவர்த்தனையை மிகவும் எளிதானதாக நினைக்கிறார்கள்.  அதோடும் சிலர், வருமான வரித்துறையின் கண்காணிப்பில் இருந்து விலகி இருக்க விரும்புவதாலும் பண பரிவர்த்தனைகளையும் செய்கிறார்கள். சிறிய அளவிலான பண பரிவர்த்தனை செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் அதிக மதிப்புள்ள பண பரிவர்த்தனைகள் செய்யும் போது கவனம் தேவை... இல்லை என்றால் வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம். மிக அதிக அளவிலான பண ப்ரிவர்த்தனை குறித்த தகவல் வருமான வரித்துறைக்கு கிடைத்தால், அப்புறம் சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கும்.நிதி முறைகேடுகள் தொடர்பாக வருமான வரித்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், அதிக மதிப்பிலான பரிவர்த்தனைகளுக்கு பணத்தைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் வருமான வரித்துறையின் கணகாணிப்பில் வருவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்தல்


மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சிபிடிடி) விதிகளின்படி, ஒரு நிதியாண்டில் ஒருவர் வங்கிக் கணக்கில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்தால், அது வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும். இந்தப் பணத்தை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளில் டெபாசிட் செய்யலாம். இப்போது நீங்கள் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக பணம் டெபாசிட் செய்வதால், இந்த பணத்தின் ஆதாரம் குறித்து வருமான வரித்துறை உங்களிடம் கேட்கலாம். 


2. நிலையான வைப்புத்தொகையில் பணத்தை டெபாசிட் செய்தல்


ஒரு நிதியாண்டில் வங்கிக் கணக்கில் ரூ.10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்ய கேள்வி எழுவது போல், நிலையான வைப்பு கணக்கில் (FD) நீங்கள், ஒரு வருடத்தில் ரூ.10 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக முதலீடு செய்ய முடியாது. இதை விட அதிக தொகையை முதலீடு செய்ய விரும்பினால், நெட்பேங்கிங் அல்லது வங்கி அட்டை  போன்ற டிஜிட்டல் முறை மூலமாகவோ அல்லது காசோலை மூலமோ செலுத்தலாம். ஒரு நிதியாண்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிலையான வைப்பு கணக்குகளில் ரூ.10 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்த நிலையில், ஏதேனும் சந்தேகம் இருந்தால், வருமான வரித் துறை உங்களிடம் பணத்தின் ஆதாரம் குறித்து உங்களை கேள்விகளைக் கேட்கலாம்.


மேலும் படிக்க | அதிர்ச்சி செய்தி! விதிகளை மாற்றிய மத்திய அரசு, இனி பென்ஷன், கிராஜுவிட்டி கிடைக்காது


3.  பெரிய அளவிலான சொத்து பரிவர்த்தனை


சொத்து வாங்கும் போது ரூ.30 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்திருந்தால், இது குறித்து சொத்துப் பதிவாளர் கண்டிப்பாக வருமான வரித்துறைக்கு தெரிவிப்பார். இதுபோன்ற சூழ்நிலையில், இவ்வளவு பெரிய பரிவர்த்தனை காரணமாக, நீங்கள் பணத்தை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள் என்று வருமான வரித்துறை கேட்கலாம்.


4. கிரெடிட் கார்டு பில் செலுத்துதல்


உங்கள் கிரெடிட் கார்டு பில் ரூ. 1 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால், நீங்கள் அதை பணமாக செலுத்தினால், பணம் எங்க்கிருந்து வந்தது என ஆதாரம் கேட்கலாம். மறுபுறம், எந்தவொரு நிதியாண்டிலும் நீங்கள் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் செலுத்தினால், நீங்கள் பணத்தை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள் என்று வருமான வரித்துறை உங்களை விசாரிக்கலாம்.


5.  பங்குகள், பரஸ்பர நிதிகள், கடன் பத்திரங்கள் அல்லது பத்திரங்களை வாங்குதல்


பங்குகள், பரஸ்பர நிதிகள், கடன் பத்திரங்கள் அல்லது பிற பத்திரங்கள் வாங்க அதிக அளவு ரொக்க பரிவர்த்தனை செய்யப்பட்டால், வருமான வரித் துறை அதனை கண்காணிக்கும். ஒருவர் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனை செய்தால், அதன் தகவல் வருமான வரித்துறைக்கு சென்றடைகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பணத்தை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள் என்று வருமான வரித்துறை உங்களிடம் ஆதாரம் கேட்கலாம்.


மேலும் படிக்க | EPS Higher Pension: அரசு ஊழியர்கள் உச்சகட்ட குஷி... இந்த மாதம் முதல் உயரும் ஓய்வூதியம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ