நீங்கள் ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதன்படி ஐஆர்சிடிசி கணக்கில் இருந்து ஒரு மாதத்தில் 6 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம், இதை விட அதிகமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, உங்கள் கணக்கை ஆதாருடன் இணைக்கப்பட வேண்டும். இதற்கிடையில் தற்போது ஐஆர்சிடிசி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் முறையை மாற்றப் போகிறது. அதன்படி இனி நீங்கள் ஒரு டிக்கெட் புக் செய்ய கூட ஆதார் விவரங்களை வழங்க வேண்டியிருக்கும். வாருங்கள் அதன் விவரங்களை முழுமையாக அறியலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐஆர்சிடிசி இலிருந்து டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான புதிய முறை
இந்த நிலையில் ஐஆர்சிடிசி இப்போது டிக்கெட் முன்பதிவு செயல்முறையை மாற்றப் போகிறது. அதன்படி அடுத்த முறை ஆன்லைனில் ஒரு டிக்கெட் கூட முன்பதிவு செய்தால் பான், ஆதார் அல்லது பாஸ்போர்ட் தகவல்கள் கேட்கப்படலாம். உண்மையில், ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு அமைப்பிலிருந்து ரயில்வே டிக்கெட் தரகர்களை விலக்க இந்த நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது. ஐஆர்சிடிசி ஒரு புதிய அமைப்பில் வேகமாக செயல்பட்டு வருகிறது, அதில் உங்கள் ஆதார்-பான் எண்ணை இணைக்க வேண்டும். ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ஆப் மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய நீங்கள் உள்நுழையும்போது, ​​நீங்கள் ஆதார், பான் அல்லது பாஸ்போர்ட் எண்ணை உள்ளிட வேண்டும்.


மேலும் படிக்க | Good News: விரைவில் விமானத்திலும் இணைய வசதியை அனுபவிக்கலாம்


ரயில்வே டிக்கெட் பான், ஆதாருடன் இணைக்கப்படும்
ஐஆர்சிடிசியுடன் அடையாள ஆவணங்களை இணைக்கும் திட்டத்தில் ரயில்வே செயல்பட்டு வருவதாக ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) இயக்குநர் ஜெனரல் அருண் குமார் தெரிவித்தார். முன்னதாக மோசடிக்கு எதிரான நடவடிக்கை மனித நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் அதன் விளைவு போதுமானதாக இல்லை என்று அவர் கூறினார். இறுதியாக, டிக்கெட்டுக்காக உள்நுழையும்போது பான், ஆதார் அல்லது பிற அடையாள ஆவணங்களுடன் இணைக்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் மோசடியை தடுக்க முடியும்.


இது குறித்து முதலில் ஒரு நெட்வொர்க்கை உருவாக்க வேண்டும் என்று அருண்குமார் கூறினார். ஆதார் ஆணையத்துடனான எங்கள் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. விரைவில் முழு அமைப்பு வேலை செய்ய தயாராக உள்ளது. அதை செயல்படுத்துவதன் மூலம் இந்த புதிய பயன்படுத்தத் தொடங்குவோம். இந்த விவகாரங்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வகையில் ரயில் சுரக்ஷா ஆப் உருவாக்கப்பட்டுள்ளது என்று அருண் குமார் கூறினார். அத்துடன் 6049 ரயில் நிலையங்கள் மற்றும் அனைத்து பயணிகள் ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் திட்டம் உள்ளது.


மேலும் படிக்க | Indian Railways: டிக்கெட் முன்பதிவு விதிகளை மாற்றியது IRCTC, இனி நேரம் மிச்சமாகும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR