முடி வளர்ச்சிக்கு உதவும் ஆலோவேரா: எல்லா பெண்களும் நீண்ட மற்றும் அடர்த்தியான கூந்தலைப் பெறவே விரும்புவார்கள். ஆனால் மோசமான வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம், மாசுபாடு மற்றும் தவறான பொருட்களைப் பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் முடி வலுவிழந்து விரைவில் அடர்த்தியும் பளபளப்பும்  குறைய தொடங்குகிறது. இதன் காரணமாக, முடி மிகவும் மெல்லியதாகி, முடி வளர்ச்சியும் குறையத் தொடங்குகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அத்தகைய சூழ்நிலையில்,  பல்வேறு வகையான ரசாயன பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். முடி நீளமாக வளர முடி சிகிச்சைகள் (Hair Care Tips)  செய்து கொள்கிறார்கள். ஆனால் இன்னும் முடி வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருப்பதில்லை. அதே நேரத்தில், சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பொருட்களில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன. அவை முடிக்கு தீங்கு விளைவிக்கும். 


முடி வளர்ச்சிக்கு சில இயற்கை பொருட்களைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. நீங்களும் உங்கள் தலைமுடியை நீளமாக வளர்க்க விரும்பினால், கற்றாழை  என்னும் ஆலோவேரா உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம், கற்றாழை முடிக்கு ஊட்டமளிப்பது மட்டுமின்றி, வறண்டு போகாமல் வைக்கிறது. மேலும், உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது முடி வளர்ச்சியை தூண்ட உதவும். இந்நிலையில், முடி வளர்ச்சிக்கு கற்றாழையை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | மாதுரி தீட்ஷித்தின் கூந்தல் அழகின் ரகசியம் இதுதான்... நீங்களும் தெரிஞ்சுக்கோங்க..!!


அலோ வேரா மற்றும் வெங்காய சாறு


முடி வளர்ச்சிக்கு கற்றாழை மற்றும் வெங்காயச் சாறு கலந்து தடவலாம். வெங்காய சாற்றில் உள்ள  கந்தகம்,  முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.  இதற்கு, ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் புதிய கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 4-5 ஸ்பூன் வெங்காயச் சாறு சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவி சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும். சுமார் 1 மணி நேரம் கழித்து, மென்மையான ஷாம்பூவின் உதவியுடன் தலைமுடியைக் கழுவவும். இந்த கலவையை உங்கள் தலைமுடிக்கு வாரத்திற்கு 1 முதல் 2 முறை தடவலாம்.


அலோ வேரா மற்றும் நெல்லிக்காய்


அலோ வேரா மற்றும் நெல்லிக்காயின் கலவை முடி வளர்ச்சிக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். நெல்லிக்காய் முடிக்கு ஊட்டத்தை அளிக்கிறது. கூடுதலாக, நீண்ட , அடர்த்தியான கூந்தலை பெற மிகவ்ம் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு 2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் தூள் அல்லது நெல்லிக்காய் சாறு சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது இந்த கலவையை  உச்சந்தலையில் தடவி சுமார் அரை மணி நேரம் விடவு வேண்டும். அதன் பிறகு மென்மையான ஷாம்பு கொண்டு தலைமுடியைக் கழுவவும். சிறந்த பலனை பெற, வாரத்திற்கு 2 முதல் 3 முறை பயன்படுத்தவும்.


அலோ வேரா மற்றும் ஆமணக்கு எண்ணெய்


முடியின் நீளத்தை அதிகரிக்க, கற்றாழை ஜெல்லை ஆமணக்கு எண்ணெயுடன் கலந்தும் தடவலாம். இதற்கு, ஒரு கிண்ணத்தில் 2 - 3 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளவும். அதில் 2 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். சுமார் 2 - 3 மணி நேரம் கழித்து, மென்மையான ஷாம்பூ கொண்டு தலைமுடியைக் கழுவவும். வாரத்திற்கு 1 முதல் 2 முறை பயன்படுத்தினால், உங்கள் தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.


முடி வளர்ச்சிக்கு மேலே குறிப்பிட்டுள்ள முறைப்படி கற்றாழையைப் பயன்படுத்தலாம். இருப்பினும், கற்றாழையில் ஏதேனும் ஒவ்வாமை இருந்தால், அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Sun Tan: வெயிலால் கருத்த முகத்தை ... பளபளப்பாக்க சில டிப்ஸ்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ