புதுடெல்லி: உங்கள் பான் கார்டை ஆதாருடன் இணைக்க தற்போது மார்ச் 31 கடைசி தேதியாகும், அந்த தேதிக்குள் நீங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிரந்தரக் கணக்கு எண் (PAN) அட்டைதாரர்கள் தங்களது ஆதார் அட்டை எண்ணுடன் மார்ச் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் இணைக்கவில்லை என்றால், உங்கள் நிதிச் சம்பந்தமான பணிகளை மேற்கொள்வதற்கு தடை ஏற்படலாம். பான் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு வரும் தங்கள் ஆதார் எண்ணுடன் இணைத்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் அபராதம் செலுத்துவதை நீங்கள் தவிர்க்கலாம். 


உங்கள் பான் கார்டு செல்லாததாகிவிடும்:
காலக்கெடுவுக்குள் உங்கள் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்கவில்லை என்றால், நீங்கள் மேலும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பான் கார்டுதாரர் ஆதாரை இணைப்பது மிகவும் முக்கியம், இல்லையெனில் உங்களது பான் கார்டு செல்லாததாகக் கருதப்படும். பான் கார்டு செல்லாத பட்சத்தில் வருமான வரி கட்ட முடியாமல், வங்கிக் கணக்கு தொடங்க முடியாமல் என பல பணிகள் முடங்கும். அதுமட்டுமில்லாமல் பரஸ்பர நிதிகள், பங்கு வர்த்தகம் தொடர்பான பணிகளும் பாதுக்கப்படும். 


மேலும் படிக்க: சில நிமிடங்களில் பான் கார்ட் உங்கள் கையில்: முழு வழிகாட்டி இதோ


பான் எண்ணை எப்படி ஆதாருடன் இணைப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்:


* வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலைத் திறக்கவும் https://incometaxindiaefiling.gov.in/.
* அதில் பதிவு செய்யுங்கள் (ஏற்கனவே செய்யவில்லை என்றால்).
* உங்கள் PAN (நிரந்தர கணக்கு எண்) உங்கள் பயனர் ஐடியாக இருக்கும்.
* பயனர் ஐடி, கடவுச்சொல் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு உள்நுழையவும்.
* ஒரு பாப்-அப் சாளரம் திறக்கும், இது உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கும்.
* பாப்-அப் சாளரம் திறக்கப்படவில்லை என்றால், மெனு பாரில் உள்ள சுயவிவர அமைப்புகளுக்குச் சென்று "இணைப்பு ஆதார்" என்பதைக் கிளிக் செய்யவும்.
* PAN இன் படி, பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற விவரங்கள் ஏற்கனவே இருக்கும்.
* உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு தகவலை சரிபார்க்கவும்.
* விவரங்கள் பொருந்தி சரியாக இருந்தால், உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு, "இப்போது இணைப்பு" பொத்தானைக் கிளிக் செய்யவும்.
* உங்கள் ஆதார் உங்கள் பான் எண்ணுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது என்று ஒரு பாப்-அப் செய்தி உங்களுக்குத் தெரிவிக்கும்.


தாமதமாக இணைத்தால் அபராதம்:
வருமான வரிச் சட்டத்தில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட பிரிவு 234H இன் படி, ஒரு பான் கார்டு வைத்திருப்பவர் தனது பான் எண்ணை ஆதார் அட்டையுடன் காலக்கெடுவுக்குள் இணைக்கத் தவறினால், அவர் ரூ.1000 தாமதக் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும். ஒருவேளை செயல்படாத பான் கார்டைப் பயன்படுத்தினால், அதற்காக நீங்கள் ரூ. 10,000 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். கவனமாக இருங்கள், உடனே பான் எண்ணை ஆதாருடன் இணையுங்கள்.


மேலும் படிக்க: உங்கள் பான் கார்டு தொலைந்துவிட்டதா? புதிய பான் கார்டு பெறுவது எப்படி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR