அதிர்ஷ்ட ராசிகள்: ஜோதிடத்தில் 9 கிரகங்கள், 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில் கணக்கீடுகள் செய்யப்பட்டு ஜோதிட கணிப்புகள் செய்யப்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு ராசியினரின் குணாதிசயங்களும் வெவ்வேறாக இருக்கும். அனைத்து ராசிகளிலும் தங்கள் ராசி கிரகங்களின் பாதிப்புகள் இருக்கும். சில ராசிகளின் இயல்பு மற்றும் நடத்தையில் சில ஒற்றுமைகளும் காணப்படுகின்றன. 


அப்படிப்பட்ட விசேஷமான இரண்டு ராசிகளை பற்றி இந்த பதிவில் காணவுள்ளோம். இவை அனுமன் மற்றும் செவ்வாய் கிரகத்தின் சிறப்பு அருள் பெற்ற அதிர்ஷ்டக்கார ராசிகள் ஆகும். இவர்களின் அருளால் இந்த ராசிக்கார்ரகளுக்கு செய்யும் பணிகளில் எல்லாம் எளிதில் வெற்றி கிடைக்கும்.


ஆஞ்சநேயரின் அருளால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கிறது


மேஷம்: மேஷத்தின் அதிபதி செவ்வாய் கிரகம் ஆகும். இந்த ராசிக்கார்ரகளின் இஷ்ட தெய்வமாக அனுமன் இருக்கிறார். இதனாலேயே இந்த ராசிக்காரர்கள் மிகவும் தைரியமானவர்களாகவும், அச்சமற்றவர்களாகவும் இருப்பார்கள். 


இவர்கள் எந்த சவாலுக்கும் அஞ்ச மாட்டார்கள். இந்த குணம் காரணமாக இவர்களுக்கு ஆபத்தும் சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால், ஆபத்து அதிகமாக உள்ளது என பிறர்  ஒதுக்கும் பணிகளில் இவர்கள் வெற்றி பெற்று சாதனை படைப்பார்கள். 


ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், எத்தகைய கடுமையான பணியாக இருந்தாலும், அதில் மேஷ ராசிக்காரர்கள் தங்கள் கடின உழைப்பால் வெற்றிபெறுகிறார்கள். பொதுவாக இந்த ராசிக்காரர்கள் அபாயகரமான தொழில்கள் மற்றும் சாகச நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்களாக இருப்பார்கள். அபாயங்களை எடுக்கும் திறன் அவர்களுக்கு வாழ்க்கையில் விரைவான வெற்றியை அளிக்கிறது.


எதிர்மறை அம்சங்கள்: இவர்களுக்குள்ளும் எதிர்மறை அம்சங்களும் இருக்கின்றன. இவர்கள் சீக்கிரம் கோபப்படுவார்கள். இவர்களை எளிதில் சமாதானப்படுத்த முடியாது. இவர்களால் அவமானத்தை தாங்க முடியாது. சில மேஷ ராசிக்காரர்கள் பழிவாங்க எந்த எல்லைக்கும் செல்வதுண்டு. இவர்கள் தங்கள் தவறை எப்போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதனால் சில சமயம் நஷ்டத்தையும் சந்திக்கிறார்கள்.


மேலும் படிக்க | சனி பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் 75 நாட்களில் ஜொலிக்கும் 


விருச்சிகம்: 


விருச்சிக ராசிக்கும் செவ்வாய் அதிபதியாக உள்ளார். இவர்களது இஷ்ட தெய்வம் அனுமன். இவர்களும் மேஷ ராசிக்காரர்களைப் போல் பயமற்றவர்களாக இருந்தாலும் மனதளவில் மிகவும் வலிமையானவர்கள். இவர்கள் எவ்வளவு பிரச்சனையில் சிக்கினாலும், தங்கள் புத்திசாலித்தனத்தால் அவற்றிலிருந்து வெளியே வந்துவிடுகிறார்கள். 


விருச்சிக ராசிக்காரர்கள் ஒவ்வொரு பிரச்சனையும் ராஜதந்திரத்துடன் எதிர்கொண்டு நிவாரணம் காண்கிறார்கள். மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அவர்கள் கவலைப்படுவதில்லை. அவர்கள் தங்கள் இலக்கில் கவனம் செலுத்தி வெற்றி பெறுகிறார்கள்.


எதிர்மறை அம்சங்கள்: இந்த ராசிக்காரர்களும் மிகவும் தன்னலம் கொண்டவர்களாக இருப்பார்கள். தாங்கள் நினைத்ததை நடத்தி முடிக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயங்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் சொந்த விருப்பப்படி வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள், அதற்காக அவர்கள் பல நேரங்களில் மற்றவர்களுக்கு வலியையும் துயரத்தையும் கூட கொடுக்கிறார்கள்.


இவ்விரு ராசிக்காரர்களும் அனுமனை வழிபட்டால், அவர்கள் செய்யும் காரியங்களில் அதிக வெற்றி கிடைக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்களுக்கு அட்சய திரிதியை மிகவும் உகந்தது 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR