சனி பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் 75 நாட்களில் ஜொலிக்கும்

ஜோதிட சாஸ்திரப்படி இரண்டரை வருடங்களில் சனி தன் ராசியை மாற்றி விடுகிறது. ஏப்ரல் 29-ம் தேதி சனி தனது ராசியை மாற்றி கும்பத்தில் நுழைந்தாலும் 75 நாட்கள் மட்டுமே இந்த ராசியில் இருப்பார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 3, 2022, 09:32 AM IST
  • கும்ப ராசியில் செவ்வாய்-சனி சேர்க்கை
  • ஜூன் 2022 அன்று வரை சனி பகவான் வக்ர பெயர்ச்சி
  • இந்த 3 ராசிக்காரர்களுக்கு அசுப பலன்கள் உண்டாகும்
சனி பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் 75 நாட்களில் ஜொலிக்கும் title=

சனியின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. நீதியின் கடவுளாகக் கருதப்படும் சனியின் ஆசீர்வாதம் பெற்றவர், ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் தங்கி அதற்கேற்றார் போல பலன்களைத் தரக்கூடியவர். 2022ல் சனிப் பெயர்ச்சி இல்லை என்றாலும், அவரின் நீண்ட அதிசார மற்றும் வக்ர பெயர்ச்சியின் காரணமாக தற்போது மோசமான பலன்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் நற்பலனும், நற்பலன் அனுபவிக்கும் சில ராசிகளுக்கு கெடுபலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

30 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 29-ம் தேதி சனி தனது சொந்த ராசியில் கும்ப ராசிக்குள் நுழைந்துள்ளார். சனியின் ராசியின் இந்த மாற்றம் பெரிய மாற்றத்தை கொண்டு வரப்போகிறது. ஆனால், இரண்டரை ஆண்டுகளில் ராசியை மாற்றும் சனி, தற்போது 75 நாட்கள் கும்ப ராசியில் இருப்பார்.

மேலும் படிக்க | இந்த ராசிக்கார பெண்கள் அதிர்ஷ்டத்தின் மறு அவதாரமாய் இருப்பார்கள்: உங்க மகளுக்கு இந்த ராசியா? 

சனியின் வக்ர பெயர்ச்சி
ஜூலை 12 க்குப் பிறகு, சனி வக்ர பெயர்ச்சியாக மீண்டும் தனது சொந்த ராசியான மகரத்தில் நுழையும். இதனுடன், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும், சிலருக்கு சுப பலன்களையும் ஏற்படுத்தும். தற்போது சனிபகவான் 3 ராசிக்காரர்களுக்கு 75 நாட்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரப் போகிறார்.

இந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவான் கருணை காட்டுவார்

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு கும்ப ராசியில் சனியின் சஞ்சாரம் நல்லது. சனி அவர்களிடம் மிகவும் அன்பாக இருப்பார். சனியின் அருளால் நல்ல பணம் கிடைக்கும். உத்தியோகத்திலோ, வியாபாரத்திலோ நல்ல வெற்றி கிடைக்கும். பணம் வருவதற்கு புதிய வழிகள் அமையும். பதவி உயர்வு இருக்கலாம். முதலீடு செய்யலாம். பழைய நோய் குணமாகும்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் ராசி மாற்றம் நல்லது. கும்ப ராசியில் 75 நாட்கள் தங்கி இருப்பதன் மூலம் சனி இவர்களுக்கு தொழிலில் பலமான பலன்களைத் தருவார். புதிய வேலை கிடைக்கலாம். பணியிடத்தில் மரியாதை பெறலாம். அதிர்ஷ்டத்தின் உதவியால் அனைத்து வேலைகளும் நிறைவேறும். வியாபாரிகளும் அதிக லாபம் அடைவார்கள்.

தனுசு: கும்ப ராசியில் சனி பிரவேசித்த உடனேயே தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் இருந்து விடுதலை கிடைத்தது. தடைப்பட்ட அவர்களின் பணிகள் இப்போது நிறைவேறும். தொழிலில் ஆதாயம் உண்டாகும். பதவி உயர்வு, மரியாதை கிடைக்கும். சனி கிரகம் சம்பந்தமான வியாபாரம் செய்பவர்களுக்கு நன்மை உண்டாகும். மொத்தத்தில் 75 நாட்களுக்கு சனி மட்டுமே பலன் தரும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரர்கள் தலைவிதி மாறும், பண மழை பொழியும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News