வாழ்க்கையில் திருமணம் செய்துகொள்வது புதியதொரு தொடக்கம். ஆனால், உங்களின் இந்த ஒரு தவறு உங்கள் வாழ்க்கையையே மோசமாக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனவேதான் நாம் நம் வாழ்க்கைத் துணையை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் நம் மனைவியுடன் உணர்ச்சி ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் இணைந்திருக்கிறோம்.  எனவே அந்த வாழ்க்கை துணை சரியாக இருப்பது மிகவும் முக்கியம். சிலர் கணவன் அல்லது மனைவியைத் தேர்ந்தெடுக்கும்போது செய்யும் தவறுகளால், அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது செய்யும் தவறுகள்


1. குடும்ப அழுத்தம்


நம் சமூகத்தில் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பெரும்பாலும் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் உதவுகிறார்கள். ஆனால் பல நேரங்களில் ஒரு பையனோ அல்லது பெண்ணோ பெற்றோரின் அழுத்தம் காரணமாக தனது விருப்பத்தை வெளிப்படுத்துவதில்லை. இதன் காரணமாக அவர்கள் தன்னைப் பிடிக்காத அல்லது முன்பின் தெரியாத நபரை திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அங்கிருந்து அவர்களின் வாழ்க்கை பிரச்சனை தொடங்குகிறது.


மேலும் படிக்க | பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உதவித் தொகை, 6 லட்சம் பெறுவது 


2. அவசரம்


வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் எப்போதும் அவசரம் காட்டவே கூடாது. அவசரம் என்பது பிசாசின் வேலை. துணையைத் தேர்ந்தெடுக்கும்போது இதை மனதில் கொள்ள வேண்டும். எந்தவொரு நபரையும் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குங்கள், ஏனென்றால் ஒரு சந்திப்பில் ஒருவரை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. தேவைப்பட்டால், அந்த நபரைப் பற்றிய தகவல்களைப் பெற நீங்கள் ஒரு பொதுவான நண்பரின் உதவியைப் பெறலாம்.


3. முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரம்


ஆண், பெண் கலாசாரம் முற்றிலும் வேறுபட்டால் திருமணத்திற்குப் பிறகு பிரச்சனைகள் வரலாம், எனவே வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் முன், கலாச்சார வேறுபாடுகளுக்குப் பிறகும் அந்த நபருடன் வாழ முடியுமா இல்லையா என்பதை கவனமாக சிந்தியுங்கள், ஏனென்றால் இது உங்களுக்கு பின் நாளில் வருத்தத்தை கொடுக்கலாம்.


4. ஈர்ப்பு இல்லாமை


நீங்கள் ஒருவரைத் திருமணம் செய்யப் போகிறீர்கள் என்றால், அந்த நபரிடம் உங்களுக்கு ஈர்ப்பு இருக்க வேண்டும். அவரால் நீங்கள் ஈர்க்கப்படுவதும் முக்கியம், ஏனென்றால் திருமண வாழ்க்கையில் உடல் நெருக்கம் மிகவும் முக்கியமானது, இல்லையெனில் வாழ்க்கை சலிப்பாக மாறும். எனவே, உங்களுக்கு அப்படியான எந்த ஈர்ப்பும் இல்லையென்றால் அந்த உறவை தவிர்த்துவிடுங்கள். யாருடைய அழுத்தத்திற்கும் உட்பட வேண்டாம்.


5. நம்பிக்கையின்மை


திருமணத்திற்கு முன் யாரையாவது தெரிந்திருந்தாலும், அவர்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால், அவர்களுடன் திருமண வாழ்க்கையை நோக்கி செல்ல நினைக்கவே வேண்டாம். ஏனெனில், திருமண பந்தம் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது, அது இல்லாவிட்டால் உறவு வலுவிழந்துவிடும்.


மேலும் படிக்க | பேன்-ஈறு தொல்லையை போக்க ஒரே வழி! இதை செய்து பாருங்கள்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ