7வது சம்பள கமிஷன் டிஏ உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி!! அவர்களுக்கு அகவிலைப்படி தொடர்பான முக்கிய புதுப்பிப்பு ஒன்று உள்ளது. சமீபத்தில், அதாவது மார்ச் மாதம் அரசாங்கம் ஜனவரி 2023 -க்கான அகவிலைப்படியை 4 சதவிகிதம் அதிகரித்தது. தற்போது மீண்டும் 52 லட்சம் மத்திய ஊழியர்களுக்கும், 48 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி குறித்த நல்ல செய்தி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஜனவரி 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்ட 4 சதவீத அகவிலைப்படியைப் பெறத் தொடங்கியுள்ளனர். இப்போது அடுத்த அகவிலைப்படி ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.


ஏஐசிபிஐ தரவு மூலம் வந்த நல்ல செய்தி


ஜூலை மாத அகவிலைப்படி அறிவிக்கப்படுவதற்கு முன், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. இந்தச் செய்தி ஊழியர்ளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. மார்ச் மாதத்திற்கான ஏஐசிபிஐ குறியீட்டு தரவு ஏப்ரல் 28 அன்று தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.


பிப்ரவரியில் இந்த எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்ட நிலையில், சரிவுக்குப் பிறகு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. முன்னதாக பிப்ரவரி 2023 இல், ஏஐசிபிஐ எண்ணிக்கையில் ஒரு சரிவு பதிவு செய்யப்பட்டது. தற்போது மார்ச் மாத எண்ணிக்கையில் முன்னேற்றத்திற்குப் பிறகு, அகவிலைப்படி அதிகரிப்பு எதிர்பார்த்தபடி 4 சதவிகிதம் வரை இருக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஏஐசிபிஐ குறியீடு மார்ச் மாதத்தில் உயர்ந்தது


டிசம்பர் 2022 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி மார்ச் 2023 இல் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியானது ஜனவரி முதல் ஜூன் 2023 வரையிலான புள்ளிவிவரங்களைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்படும். ஜனவரியில், இந்த எண்ணிக்கை 132.8 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இதற்குப் பிறகு இந்த எண்ணிக்கை பிப்ரவரியில் சரிந்து 132.7 புள்ளிகளை எட்டியது. மார்ச் மாதத்தில் இது மீண்டும் எழுச்சி பெற்று 133.3 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.


மேலும் படிக்க | அரசு ஊழியர்கள் அதிர்ச்சி... அகவிலைப்படியை உயர்த்த மாநில அரசு மறுப்பு!


இந்த எண்ணிக்கை 44 சதவீதத்தை தாண்டியுள்ளது


பிப்ரவரியில் 132.7 என்ற எண்ணிக்கையின் அடிப்படையில், அகவிலைப்படி 44 சதவீதத்தை எட்டியுள்ளது. இம்முறை 44 சதவீதத்தை தாண்டி அதிகரித்துள்ளது. தற்போது அகவிலைப்படி 42 சதவீதமாக உள்ளது. ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு தரவுகளின் அடிப்படையில் அறிவிக்கப்படும். இம்முறை அது 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அகவிலைப்படி செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படலாம். ஆனால் இது ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும்.


அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்


ஜனவரி மாத அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்ட பிறகு, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவீதமாக அதிகரித்துள்ளது. இப்போது இதில் மேலும் 4 சதவீதம் அதிகரித்தால், டிஏ 46 சதவீதமாக உயரும். ஏழாவது ஊதியக் குழுவின் கீழ், மத்திய அரசு ஊழியர்களின் டிஏ ஆண்டுக்கு இரண்டு முறை அதிகரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 2023 இன் அகவிலைப்படி மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. இப்போது ஜூலை 2023 இன் அகவிலைப்படி அடுத்தது அறிவிக்கப்படும். 


தரவுகளை வெளியிடுவது யார்?


ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு இருக்கும் என்பது முடுவு செய்யப்படுகின்றது. ஒவ்வொரு மாதத்தின் கடைசி வேலை நாளில், அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (ஏஐசிபிஐ) புள்ளிவிவரங்கள் தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்படுகின்றன. இந்த குறியீடு 88 மையங்களுக்கும் மற்றும் நாடு முழுவதும் தயாரிக்கப்பட்டுகிறது. 


மேலும் படிக்க | 7th Pay Commission மாஸ் அப்டேட்: ஊழியர்களுக்கு இரட்டை குட் நியூஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ