அரசு ஊழியர்கள் அதிர்ச்சி... அகவிலைப்படியை உயர்த்த மாநில அரசு மறுப்பு!

அறிவிக்கப்பட்ட அகவிலைப்படியை உயர்வை, அதிகரிக்க கோரி மேற்கு வங்க அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் நிலையில், டிஏ-வை உயர்த்த வாய்ப்பில்லை என அரசு தெரிவித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : May 7, 2023, 06:31 PM IST
  • மேற்கு வங்க நிதியமைச்சர் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி அறிவித்தார்.
  • இருப்பினும், மத்திய அரசின் அகவிலைப்படியை விட மேற்கு வங்க அரசின் டிஏ குறைவு என குற்றச்சாட்டு.
  • ஓய்வூதியத்திற்கு ரூ. 20,000 கோடி செலவிடுகிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா தெரிவித்தார்.
அரசு ஊழியர்கள் அதிர்ச்சி... அகவிலைப்படியை உயர்த்த மாநில அரசு மறுப்பு! title=

DA Hike: அறிவிக்கப்பட்ட அகவிலைப்படியை உயர்வை, அதிகரிக்க கோரி மேற்கு வங்க அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் நிலையில், டிஏ-வை உயர்த்த வாய்ப்பில்லை என அரசு தெரிவித்துள்ளது.

7th Pay Commission DA Hike: மத்திய அரசு மார்ச் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுவோருக்கும் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்த பிறகு, பல மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியுள்ளன. ஆனால், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அதிகரிக்க மறுப்பு தெரிவித்துவிட்டதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் 100 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி, முதலமைச்சர் மம்தா பானர்ஜி இல்லம் அருகே அரசு ஊழியர்களின் கூட்டமைப்பு மாபெரும் பேரணிக்கு நேற்று (மே 6) ஏற்பாடு செய்தது.

கொல்கத்தா தெருக்களில் ஆர்ப்பாட்டம்

இதன்போது, கொல்கத்தா வீதிகளிலும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்களுக்கு அணிவகுப்பு நடத்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய ஊழியர்கள் பதாகைகளை ஏந்தியபடி வீதிகளில் இறங்கினர். அப்போது, ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவும், அகவிலைப்படியை உயர்த்தவும் கோரிக்கை விடுத்தார். மேற்கு வங்கத்தில் உள்ள அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக அகவிலைப்படியை உயர்த்த கோரி வருகின்றனர்.

மேலும் படிக்க | காங்கிரஸ் வெளியிட்ட பாஜக ஊழல் பட்டியல் விளம்பரம்... விளக்கம் கோரும் தேர்தல் ஆணையம்!

சம்பளத்தில் ஆறு சதவீதம் டி.ஏ

மம்தா பானர்ஜி, கடந்த நாட்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு அளித்த பதிலில், அரசாங்கத்தால் எவ்வளவு அகவிலைப்படியை உயர்த்தி இருக்க முடியுமோ, அது அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இப்போது மற்றொரு சலுகையை வழங்கும் திறன் அரசுக்கு இல்லை. சமீபத்தில், நிதியமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி அறிவித்தார். மேற்கு வங்காளத்தில் டிஏ அடிப்படை சம்பளத்தில் ஆறு சதவீதமாக உள்ளது. 

அரசு ஊழியர்களுடன் எதிர்க்கட்சி

மத்திய ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை விட, மாநில அரசு வழங்கும் அகவிலைப்படியை மிகவும் குறைவு. மத்திய ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் 42 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆதராவாக உள்ளன.

மத்திய ஊழியர்களின் சம்பளம், மாநில அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளம் வேறு என்று மம்தா பானர்ஜி கூறியிருந்தார். மாநில அரசு ஊழியர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுமுறை பெறுகின்றனர் என்றார். மேற்கு வங்கம் இன்னும் ஓய்வூதியம் (ஓய்வு பெற்றவர்களுக்கு) வழங்கும் மாநிலம் என்றும் பானர்ஜி கூறினார். இதற்காக அரசு ரூ. 20,000 கோடி செலவிடுகிறது என்றும் தெரிவித்தார். 

மேலும் படிக்க | Go First நெருக்கடியால் எகிறும் கட்டணங்கள்! அதிர்ச்சியில் விமான பயணிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News